Skip to main content

பேனர்  உரிமையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பேனர் கட்டும் தொழிலாளர்களின் ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி பாலசந்தர் தலைமையில்  நடந்தது.

Published on 20/09/2019 | Edited on 13/12/2019

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சென்னை குரோம்பேட்டை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அதிமுகவினர் சாலையின் நடுவே வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் காற்றடித்து  திடிரென்று சாய்ந்தது. அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ  என்ற பெண் மீது டிஜிட்டல் பேனர் விழுந்ததில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அதே திசையில் பின்னால் வந்த தண்ணீர் லாரி அதிவேகமாக மோதிய விபத்தில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

owner meeting




இந்த சம்பவம் வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. உடனே சென்னை உயர்நீதிமன்றம் தானக முன்வந்து  டிஜிட்டல் பேனர் விளம்பரங்களை வைப்பதால் தான் சாலையில் போக்குவரத்து இடையூறாகவும், பொதுமக்களும் அமைந்ததால் தான் சாலை விபத்தில் பரிதாபமாக சுபஸ்ரீ உயிரிழந்தார்.

அதனால் உடனே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினர் டிஜிட்டல் பேனர்களை உடனே அகற்ற தமிழக காவல்துறை அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கப்பட்டது.


நீதிமன்ற உத்தரவின் படி விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும்  வைக்கப்பட்ட  டிஜிட்டல் பேனர்களை உடனே அகற்ற அந்த அந்த காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வைத்திருந்த டிஜிட்டல் பேனர்களை போலீசார் அகற்றினார்கள்.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட எஸ் பி ஜெயக்குமார் ஆகிய மாவட்ட அதிகாரிகளின் உத்தரவின்படி உளுந்தூர்பேட்டை சரகத்திற்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், எலவனாசூர்கோட்டை, எடைக்கல் ஆகிய காவல் நிலையம் எல்லை பகுதியில் உள்ள டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், டிஜிட்டல் பேனர்களை கட்டும் கூலித்தொழிலாளிகள் என அனைவருக்கும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் டிஎஸ்பி பாலசந்தர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது டிஜிட்டல் பேனர்கள் அடித்தால் கடைக்கு சீல் வைத்து பூட்டுகள் போட்டு பூட்டி உரிமையாளர்கள் மீதும், பேனர் வைப்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவுப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என கூறினார்.

அப்போது இன்ஸ்பெக்டர்கள் விஜி, பத்மா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபி, மாணிக்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; உரிமையாளர் ஜாமீனில் விடுவிப்பு!

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
chennai alwarpet incident Owner Bail Out

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த கேளிக்கை விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை கடந்த 28 ஆம் தேதி (28.03.2024) இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இது குறித்து சென்னை அபிராமபுரம் காவல்துறையினர், ‘அஜாக்கிரதையாக செயல்பட்டு பிறருக்கு மரணத்தை விளைவித்தல்’ என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த விபத்து தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் நடைபெறவில்லை என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (C.M.R.L.) சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்த அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் சதீஷ் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த கேளிக்கை விடுதியின் உரிமையாளர் அசோக்குமார் நேற்று (30.03.2024) இரவு அபிராமபுரம் காவல் நிலையத்தில் தனது வழக்கறிஞர்களுடன் சரணடைந்தார். இதனையடுத்து சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின் கேளிக்கை விடுதியின் உரிமையாளர் அசோக்குமார் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசோக்குமாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், “தொடர்ந்து விடுதிகளை பராமரித்து வந்தோம். இருப்பினும் மெட்ரோ ரயில் பணிகளின் போது கட்டடங்களில் அதிர்வுகள் ஏற்பட்டன. இதே போன்ற அதிர்வுகள் அருகில் கட்டங்களிலும் ஏற்பட்டன. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் இரு முறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது”எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

வெள்ளாளர் முன்னேற்ற சங்க உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Vellalar Munnetra Sangha High Level Executive Meeting

தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கழகத்தின் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து உயர்மட்ட நிர்வாகிகள் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஆர்.வி. ஹரிஹரூன் தலைமையில் இன்று (12-03-24) நடைபெற்றது. இதில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் சார்பில் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்த கருத்துகளை உயர்மட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள். மேலும், இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சோழிய வேளாளர் நலச் சங்கம் சார்பாக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் தேர்தல் கூட்டணி, ஆதரவு நிலைப்பாடுகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் ஆலோசனைகள் மேற்கொண்டு இறுதி முடிவை வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் & கழகத்தின் உயர் மட்ட கமிட்டி விரைவில் அறிவிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது .