Skip to main content

'முல்லைப் பெரியாறு பற்றிப் பேச ஓபிஎஸ், இபிஎஸ்க்கு தார்மிக உரிமை கிடையாது'- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

'OPS and EPS have no moral right to talk about Mullai Periyar' - Interview with Water Resources Minister Duraimurugan!

 

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் கர்னல் பென்னிகுக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்காகத் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உள்பட எம்எல்ஏக்களும், அதிகாரிகளும் குமுளியில் உள்ள தேக்கடியில் இருந்து முல்லைப் பெரியாறு அணைக்குப் படகில் சென்று மெயின் அணையையும் பேபி அணையையும் மற்றும் அணையிலிருந்து கேரளாவுக்குத் திறந்துவிடப்பட்ட தண்ணீரையும் பார்வையிட்டு ஆய்வு செய்து  மீண்டும் அதே தேக்கடிக்கு வந்தனர்.

 

அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும் போது, ''நான் இந்தத் துறையின் அமைச்சர் என்ற முறையில் முல்லைப் பெரியாறு அணையை இன்று ஆய்வு செய்துள்ளேன். பதவியேற்றபோதே தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆய்வு செய்யத் திட்டமிட்டிருந்தேன். கரோனா காலம் என்பதால் உடனடியாக ஆய்வுப் பணியைத் தொடங்க முடியவில்லை. தற்போது ஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளேன். தொடர்ச்சியாக ஆழியாறு உள்ளிட்ட அணைகளைப் பார்வையிட உள்ளேன். சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் விதியைக் கொண்டு வந்துள்ளது. அதற்குப் பெயர் 'ரூல் கர்வ்' அந்த விதிப்படி 30 ஆண்டுகள் எவ்வளவு தண்ணீர் வந்தது. எவ்வளவு நீர்மட்டம் உயர்ந்தது என்பதைக் கணக்கெடுத்துள்ளனர். அந்த க் கணக்கெடுப்பின்படி அணையின் நீர்மட்டம் எந்தெந்த காலகட்டத்தில் எவ்வளவு வைத்திருக்க வேண்டும் என அட்டவணை கொடுத்துள்ளனர். அப்படிப் பார்க்கும்போது இன்றைய நிலவரப்படி 139.50 அடி நீர்மட்டம் வைக்க அனுமதி வைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 30 ஆம் தேதி 142 உயர்த்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் தான், தண்ணீர் திறந்துள்ளோம். 1979-ல் அணை பலவீனமாக இருக்கிறது. பலப்படுத்த வேண்டும் எனக் கூறினார். அதையடுத்து 3 நிலைகளில் பலப்படுத்தும் பணி நடந்தது. 152 உயர்த்த வேண்டும் என கோட்டுக்குச் சென்றோம். பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு 152 நீர்மட்டம் நிலைநிறுத்திக் கொள்ளலாம் எனக் கூறியது. அந்தப் பேபி அணையைப் பார்வையிட்டேன். அதில் என்னப் பிரச்சனை என்றால் அந்த அணை கீழே 3 மரங்கள் இருக்கிறது. அந்த மரங்களை அகற்றினால் பலப்படுத்தும் பணி நடத்த முடியும். கேரள அரசைக் கேட்டால், வனத்துறையிடம் கேட்க வேண்டும் என்கிறனர். வனத்துறையை அணுகினால் மத்திய வனத்துறையை அணுகக் கூறுகின்றனர். விரைவில் அந்த 3 மரங்களை அகற்றிவிடுவோம். அகற்றி விட்டால் பேபி அணையை பலப்படுத்தி 152 அடி நீர்மட்டம் உயர்த்தி விடலாம். அணையிலிருந்து தமிழகத்திற்குக் கூடுதலாகத் தண்ணீர் எடுப்பது குறித்து இருமாநில அரசுகளும் பேசி தான் முடிவெடுக்க வேண்டும். 

 

'OPS and EPS have no moral right to talk about Mullai Periyar' - Interview with Water Resources Minister Duraimurugan!

 

முல்லைப்பெரியாறு குறித்துப் பேசுவதற்கு ஒபிஎஸ்-க்கும், ஈபிஎஸ்-க்கும் தார்மீக உரிமை கிடையாது. இரண்டு பேரும் மாறிமாறி பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருந்தனர். பத்து ஆண்டுக்காலத்தில் அந்தத் துறையின் அமைச்சர்கள் ஒருவராவது இந்த அணையை வந்து பார்வையிட்டுள்ளனரா? நான் இந்த 80 வயதில் தட்டுதடுமாறியாவது வந்து ஆய்வு செய்துள்ளேன். ஈபிஎஸ் ஆவது சேலத்துக்காரர், ஓபிஎஸ் தேனிக்காரர். இவராவது ஆய்வு செய்திருக்கலாம். அப்போது கவனிக்காமல் இப்போது உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறுவதைப் பார்த்து நாடே சிரிக்கிறது. பக்கத்து மாநில அமைச்சர்கள் அந்யோநியாமாக இருந்தால் பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கலாம். 15 ஆண்டுகளுக்கு முன் சென்ற வந்த போட்டில் தான் இன்றும் ஆய்வு செய்து வந்தேன். நல்லகாலம் வழியில் அந்த போட் நிற்கவில்லை. ஆய்வின்போது கூறினேன். தமிழக சார்பில் அதிவேக படகுகள் வாங்கி விட வேண்டும் என்றேன். 3 மரங்களை வெட்டுவதற்கு 7 ஆண்டுகளாக முடியவில்லை. நாங்கள் வந்து 6 மாதங்கள் தான் ஆனால் அனுமதி பெற்றுவிடுவோம். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரை தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். அவர் நேர்மையான சுமூகமான அமைச்சர். அவர் காலத்தில் தான் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தீர்வு காணப்படும்'' என்று கூறினார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.