Skip to main content

குழந்தைகளின் உயிருக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பிறகு, பள்ளிகளைத் திறங்கள்! - பெற்றோா்கள் கருத்து!

Published on 09/11/2020 | Edited on 09/11/2020

 

Opinions of parents leaving schools open to ensure the safety of children's lives

 

கரோனா தொற்று பரவலால் கடந்த மாா்ச் மாதம் தமிழகத்தில் அனைத்துப் பள்ளி, கல்லூாிகளும் மூடப்பட்டன. இதனால் பொதுத் தோ்வுகள் நடந்து கொண்டிருந்த +2 மாணவா்கள் கடைசித் தோ்வை எழுதவில்லை. மேலும் 10 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வு நடத்தப்படவில்லை. மேலும், மற்ற வகுப்பு மாணவா்கள் அனைவரும் 'ஆல் பாஸ்' என அறிவிக்கபட்டது. இதே போல் கல்லூாிகளும் திறக்கப்படாமல் இருந்தது. பிறகு, அாியா்ஸ் மாணவா்களும் தோ்வு எழுத வேண்டாம். அவா்கள் தோ்வுக் கட்டணம் செலுத்தி இருந்தால் 'பாஸ்' என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையில் பள்ளி மாணவா்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கபட்டிருக்கும் நிலையில், வருகிற 16 -ஆம் தேதி 9,10,11,12 -ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்குப் பெரும்பாலான பெற்றோா்களும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தொிவித்துள்ளன. இதனையடுத்து, அரசு மாணவா்களின் பெற்றோா்களிடம் 9 -ஆம் தேதி கருத்து கேட்டு அதன் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது.

இதனையடுத்து, இன்று (9-ஆம் தேதி) தமிழகம் முமுவதும் உள்ள 9,10,11, மற்றும் 12 -ஆம் வகுப்பு மாணவா்களின் பெற்றோா்களை பள்ளிக்கு அழைத்து பள்ளிகளை திறக்கலாமா? திறந்தால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவீா்களா? என்ற கேள்விகளைப் பள்ளி கல்வித்துறை சாா்பில் பெற்றோா்களிடம் கேட்டு, அவா்களின் கருத்துகளை வாய்மொழியாகவும் எழுத்து மூலமாகவும் பதிவு செய்தனா்.

 

cnc


இதில், குமாி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 433 பள்ளிகளில் பெற்றோா்களிடம் கருத்து கேட்கபட்டது. இதில், பெரும்பாலான பெற்றோா்கள் பள்ளிகளை திறப்பதற்கு எதிராகக் கருத்துகளைத் தொிவித்துள்ளனா். இதுகுறித்து, நம்மிடம் பேசிய பெற்றோா்கள், இரண்டாவது கட்ட கரோனா வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணா்களும், நோய் கண்டறியும் ஆராய்ச்சியாளா்களும் கூறியுள்ளனா். அடுத்த 20 நாட்களுக்கு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று மருத்துவ நிபுணா்கள் கூறியுள்ளனா். அதற்குள் இன்னும் 6 நாட்களுக்குள் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

நம்மை விடக் குறைவாக உள்ள கேரளாவில், அந்த அரசு ஜனவாி மாதம் வரை பள்ளிகளைத் திறக்கப் போவதில்லை என்று கூறியுள்ளது. எனவே, தமிழக அரசு குழந்தைகளின் உயிருக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி விட்டு பள்ளிகளைத் திறக்கட்டும் என்றனா்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்” - இ.பி.எஸ். ஆதங்கம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Make ADMK win at least this time EPS Fear

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27.03.2024) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி, இதுவரை மீனவ சமுதாயத்தினருக்கு இதுபோன்று வாய்ப்பு வழங்கியதில்லை. இந்த முறை அ.தி.மு.க. சார்பில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பசிலியான் நசரேத்தை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு முறை கூட அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறவில்லை. எனவே இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்.

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் ஆசை வார்த்தைகளை கூறி தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை தி.மு.க. அரசு  ஏமாற்றியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற மக்களவையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நமது அ.தி.மு.க. வேட்பாளர் குரல் கொடுப்பார். விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வே காரணம். பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.தான். நீட்டை தடுத்து நிறுத்த போராடுவது அ.தி.மு.க.. அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என பல கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பைக்கு கூட வரி விதிப்பு என அனைத்திற்கும் வரி போடும் அரசாக தி.மு.க. உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம். சிறுபான்மையின மக்களுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கண் இமையை பாதுகாப்பது போல் பாதுகாக்கும். தி.மு.க.வினரை தன் குடும்பம் என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சித் தலைவராக தொண்டரை நிறுத்துவாரா?. வாக்குகளை பெறவே கட்சியினரை தன் குடும்பம் என்று கூறி தி.மு.க.வினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க. எனவே சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பொறுப்புக்கு வரலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'அப்பாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' - விஜய் வசந்த் நம்பிக்கை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'I will win by a bigger margin than my father' - Vijay Vasant Hope

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இன்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியில் போட்டியிடும் விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''நான் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறேன். மீண்டும் வெற்றிபெற்று என்னுடைய மக்கள் பணியை மீண்டும் தொடருவேன் என்று நம்பிக்கையோடு இந்த பயணத்தை தொடர்கிறேன். தேர்தலைப் பொறுத்தவரை 2019ல் எனது தந்தை அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த 2024 தேர்தலில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

2024 பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை கன்னியாகுமரி என்பது இயற்கை வளம் சார்ந்த பகுதி. குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்த தொகுதியில் நான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்பவர்கள் ஏதாவது செய்திருக்கிறார்களா? இந்த தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளில் என்னால் முடிந்த அளவுக்கு செய்து கொண்டு வந்திருக்கிறேன். மெதுவாக நடந்து கொண்டிருந்த ரயில்வே ரெட்டிப்பு பாதையை வேகப்படுத்தியிருக்கிறோம். இப்படி பல விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அரசியல் காரணத்திற்காகவும், தேர்தல் நேரம் என்பதாலும் இப்படி குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்'' என்றார்.