Skip to main content

‘வீடியோ காலில் வா...’ - ஓ.பி. ரவீந்திரநாத்தால் இளம்பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

o.p ravindranath MP who misbehaved with the young woman

 

ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் மீது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பெண் ஒருவர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். 

 

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் தனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுப்பதாகக் கூறி காரைக்குடியைச் சேர்ந்த காயத்ரி தேவி, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எங்கள் குடும்பத்தினரும் ஓ. பன்னீர் செல்வம் குடும்பத்தினரும் நண்பர்களாகப் பழகி வந்தோம். ஓ.பி. ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி எனக்கு தோழி. ஆனந்தியின் மற்றொரு தோழியான மலருடன் ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு தொடர்பு உள்ளது. என் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு எனது கணவரை விவாகரத்து செய்தேன். இந்த நேரத்தில்தான் ரவி அண்ணாவின் ஃபோனில் இருந்து பேசிய ஒருவர், ஓபி. ரவீந்திரநாத் உங்கள் மீது ஆர்வமாக உள்ளார் என்றார். ஆனால், நான் அவரை அண்ணனாகவும், ஓபிஎஸ் அவர்களைத் தந்தையாகவும் பார்க்கிறேன். 
 

o.p ravindranath MP who misbehaved with the young woman

 

இதையடுத்து ஏப்ரல் 1 ஆம் தேதி ரவீந்திரநாத்தின் தொலைப்பேசி எண்ணில் இருந்து எனக்கு ஃபோன் வந்தது. நானும் ஃபோனை எடுத்துப் பேசினேன். நன்றாகப் பேசி வந்த அவர் ஒரு கட்டத்தில், என்னிடம் ரொம்ப ஆபாசமாக பேசத் தொடங்கி விட்டார். இதற்கு நான் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அவர் என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். நான் உடனடியாக ஃபோனை கட் செய்துவிட்டேன். ஆனால் ஆபாச வீடியோ காலில் வா.. என்று தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தார். அம்மாவுக்கும், தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாதா? எந்த மாதிரியான எண்ணத்தில் அவர் வீடியோ கால் வர சொன்னார் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆண்கள் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதற்கு இதை பயன்படுத்திக் கொள்கின்றனர். ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு பெண் உள்ளது. அவர்களுக்கெல்லாம் இதுபோல் ஃபோன் வந்தால் அவர்கள் விட்டு விடுவார்களா?

 

இது குறித்து ரவீந்திரநாத் மனைவியிடமும் சொல்லி இருந்தேன். மன்னிப்பு கேட்காவிட்டால் நான் மீடியாவிடம் செல்வேன் எனக் கூறிய நிலையில், எனக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கி உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் ஓ.பி.எஸ்ஸிடமும் சொல்லி இருந்தேன். ஓ.பி.எஸ்ஸிடம் பேசும்போது, நான் சொல்வதை கேட்கும் நிலையில் அவர் இல்லை, அம்மாவின் திதிக்கே ரவீந்திரநாத் வரவில்லை என்று கூறினார். அவரின் நண்பர் முருகன் என்பவரும் என்னை மிரட்டுகிறார். ஓ.பி. ரவீந்திரநாத் இரவு முழுவதும் அழைத்த வீடியோ கால்கள் எனக்கு ஆதாரங்களாக உள்ளது. இதனை டிஜிபியிடம் புகாராகக் கொடுத்துள்ளேன்’’ என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதே குற்றச்சாட்டு - சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை மீது மீண்டும் புகார்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
complaint against Sundhara Travels actress radha

முரளி, வடிவேலு உள்ளிட்ட பல பேர் நடிப்பில் 2002ல் வெளியான சுந்தரா ட்ராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. தொடர்ந்து அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்பு நடிப்பிலிருந்து விலகியிருந்தார். 

இந்த சூழலில் கடந்த மாதம் ராதா மீதும் அவரது மகன் மீதும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்த டேவிட் ராஜ், தன் மகனை இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே ராதா தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் கொடுக்கப்பட்டு, அதன் விசாரணை நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முரளி என்பவர் தரப்பில், ராதா மீது வடபழனி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முரளியை ராதா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முரளிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முரளியின் புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து ராதா மீது ஒரே மாதிரியான புகார்கள் எழுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.