Skip to main content

“இதைச் செய்தால்தான் சுரங்கத்தின் மற்ற பணிகளைச் செய்ய முடியும்” - அமைச்சர் தங்கம் தென்னரசு

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

'Only by doing this can we do other tasks that may be in the mine' - Minister Thangam Tennarasu interview

 

என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இன்று இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ''இதில் மிச்சம் 30 ஏக்கர் நிலங்களை நில உரிமையாளர்கள் என்.எல்.சிக்கு கொடுக்காமல் இருக்கக்கூடிய சூழ்நிலையில் என்.எல்.சியினுடைய சுரங்க விரிவாக்க பணிகளுக்கு இந்த பரவனாறு மாற்றுப்பாதை என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதைச் செய்தால்தான் சுரங்கத்தில் இருக்கக்கூடிய மற்ற பணிகளைச் செய்ய முடியும். சுரங்கத்தில் உள்ள மற்ற பணிகள் நடைபெற்றால் தான் மின்சார உற்பத்தி பாதிக்காமல் இருக்கும். மின்சார உற்பத்தி பாதிக்காமல் இருந்தால் தான் நமக்கு உரிய மின்சாரம் வழங்கப்படக்கூடிய சூழ்நிலை வரும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடலூர் மாவட்டத்தின் நிர்வாகம் மூலம் தொடர்ச்சியாகப் பேசப்பட்டிருக்கிறது.

 

'Only by doing this can we do other tasks that may be in the mine' - Minister Thangam Tennarasu interview

 

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரிடமும் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று உரிமையாளர்கள் சொல்லி இருக்கக்கூடிய பல்வேறு கோரிக்கைகள் சார்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதனுடைய அடிப்படையில் பார்த்தால் 2006 முதல் 2013 வரை கையகப்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய 104 ஹெக்டேர் பரப்பளவிற்குள் வரக்கூடிய 382 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு 6 லட்சம் என்று வழங்கப்படக்கூடிய இந்த இழப்பீடு தொகை நீங்கலாக 10 லட்சம் கூடுதலாக கருணைத்தொகை வழங்கப்பட இருக்கிறது. அதே காலகட்டத்தில் 2006ல் இருந்து 2013 வரை கையகப்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய 83 ஹெக்டேர் பரப்பளவில் வரக்கூடிய 405 நில உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு 2.6 லட்சம் என்ற இழப்பீட்டு தொகை நீங்கலாக மேலும் ஒரு 14 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் 2000 முதல் 2005 ஆம் ஆண்டு வரை கையகப்படுத்தப்பட்ட 77 ஹெக்டேர் பரப்பளவில் வரும் 31 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே 2.4 லட்சம் இழப்பீடு தொகை வழங்கியது போக ஆறு லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது. மொத்தமாக 1088 நில உரிமையாளர்களுக்கு 75 கோடி ரூபாய்க்கு மேலான இழப்பீடு தொகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பரவனாற்று பாதையில் ஏற்கனவே பயிர் செய்திருக்கும் விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகையாக ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் அளவிற்கு என்.எல்.சியிடம் இருந்து நாம் இழப்பீடு தொகை பெறுவோம் என்றும் உறுதி அளித்து இருக்கின்றோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.