Skip to main content

அதிமுகவினர் மட்டுமே வேட்பாளர்களாக அறிவிப்பு - பூட்டுப்போட்டு தொழிலாளர்கள் போராட்டம்

Published on 02/04/2018 | Edited on 03/04/2018
puthukai

 

 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த 7 பேர் மட்டுமே வேட்பாளராக அறிவித்துள்தைக் கண்டித்து புதுக்கோட்டை தையல் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு பூட்டுப்போட்டு சிஐடியு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

புதுக்கோட்டை திலகர் திடல் அருகில் உள்ளது மாவட்ட மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கம். இந்த சங்கத்திற்கு 7 இயக்குனர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும். அதிமுக சங்கத்தின் சார்பில் 7 பேர், திமுகவின் சார்பில் 7 பேர், சிஐடியு சார்பில் தையல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.மாரிக்கண்ணு உட்பட 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 

 

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் பட்டியலில் உள்ள 7 பேரைத் தவிர இதர 8 பேரையும் தகுதிநீக்கம் செய்துவிட்டு அதிமுகவினரை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படடதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நாளான திங்கள் கிழமையன்று கூட்டுறவு சங்கத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி கண்ணன் என்பவர் இல்லை. அங்கிருந்த எழுத்தரிடம் கேட்டதற்கு அவர் சென்னை சென்றுள்ளார். எனக்கு எதுவும் தெரியாது எனக்கூறினார்.

பூட்டுப்போடும் போராட்டம்

இத்தகைய முறைகேடான தேர்தலைக் கண்டித்து கூட்டுறவு சங்கத்தின் முன்பாக புதுக்கோட்டை மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியு) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நாளன்று தேர்தல் நடத்தும் அதிகாரி வராததைக் கண்டித்தும், மேல் அதிகாரிகளிடம் முறையிட்டும் முறையான பதில் அளிக்க மறுத்ததைக் கண்டித்தும் கூட்டுறவு சங்கத்திற்கு பூட்டுப்போட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், நகரச் செயலாளர் சி.அடைக்கலசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ், செயலாளர் கே.முகமதலிஜின்னா, துணைத் தலைவர்கள் எம்.ஜியாவுதீன், எஸ்.பாலசுப்பிரமணியன், தையல் கூட்டுறவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.மாரிக்கண்ணு, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.விக்கி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

பூட்டுப்போடும் போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போட்டிருந்த பூட்டை உடைத்துவிட்டு, அலுவலகத்திற்கான பூட்டைப் போட்டு பூட்டியதோடு அங்கிருந்த அதிகாரிகளையும் வெளியேற்றினர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இந்த முறைகேடு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். மேலும், 

சிபிஎம் கண்டனம்

இதுகுறித்து மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறும்போது, மாவட்டம் முழுவதும் கூட்டுறவு சங்கத் தேர்தல் இதுபோன்ற அராஜகமான முறையில் தான் அரங்கேற்றப்படுகிறது. மாவட்ட ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து பலமுறை முறையிடும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது கூட்டுறவு என்ற அமைப்பதே சிதைக்கும் நடவடிக்கையாகும். அளுங்கட்சியினர் கொள்ளையடிக்க மட்டுமே கூட்டுறவு சங்கங்கள் என்ற நிலையை உருவாக்கும் அதிமுகவினரின் இத்தகைய அராஜக நடவடிக்கையைக் கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.

போட்டோ – pனம1இ pனம2.
 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
heat exposure; Samiana pandal at polling centers

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுசேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குச் சாவடிகளைத் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பாதுகாப்பு வசதி சரியான நிலையில் கதவு, ஜன்னல் மின்சார வசதி, ஃபேன், வாக்காளர் வந்து செல்ல வழிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், குடிநீர் மர நிழல், அல்லது கான்கிரீட் தள நிழல், கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.  

இந்தநிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் நிழல் தரும் மரங்கள் அல்லது கட்டிட நிழல் உள்ள வாக்குச்சாவடிகள் தவிர இதர வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வசதிக்காக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எத்தனை வாக்குச் சாவடிகளுக்கு சாமியான பந்தல் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் பிறகு சாமியானா பந்தல் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி (படங்கள்)

Published on 20/03/2024 | Edited on 20/03/2024

 

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மேலும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதியை ஒதுக்கீடு செய்து கையெழுத்திட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அதே போல், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் போட்டியிடும் கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்குக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் இறுதியானது.