Skip to main content

ராட்சத இயந்திரத்தை ஏற்றிவந்த ஓ.என்.ஜி.சி. வாகனத்தை மறித்த பொதுமக்கள்!  

Published on 05/01/2022 | Edited on 05/01/2022

 

ONGC, which loaded the giant machine

 

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு சொந்தமான லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கடலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட திருவேள்விக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு எண்ணெய் கிணறு அமைந்துள்ளது. சுமார் 25 ஆண்டுகள் பழமையான இந்த எண்ணெய் கிணற்றை மீண்டும் புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபடுவதாகக் கூறி பல்வேறு இடங்களிலிருந்து ராட்சத இயந்திரங்கள் மற்றும் தளவாட சாமான்களை கடந்த சில தினங்களாக கொண்டுவத்து இறக்குகின்றனர்.

 

ONGC, which loaded the giant machine

 

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், மயிலாடுதுறை மாவட்டமும் டெல்டா மாவட்டங்களில்தான் இருக்கிறது, புதிய எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு தடை உள்ளது என்றும், பழைய எண்ணை கிணற்றை சட்டத்திற்கு புறம்பாக புதுப்பிப்பதாக கூறி ராட்சத இயந்திரங்களை கொண்டுவந்து இறக்குவது முறையல்ல என மயிலாடுதுறை கல்லணை சாலையில் திருவேள்விக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு தளவாட பொருட்களை ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

 

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், மற்றும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புகளை சேர்ந்தவர்கள் பொதுமக்களோடு சேர்ந்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ONGC, which loaded the giant machine

 

"ஒ.என்.ஜி.சி. பணிகளை நிறுத்தும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். வேளாண் மண்டலம் என்கிற தீர்மானத்தை மதிக்காமல் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்படுகிறது. இதே போக்கை தொடர்ந்து செய்துவந்தால் மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று தொடர்போராட்டத்தை முன்னெடுக்கவும் தயங்கமாட்டோம்" என்கிறார்கள் போராட்டக்குழுவினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழியையேற்று உண்ணாவிரத அறிவிப்பு வாபஸ்"- பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

"Withdrawal of the fast notice after taking the oath of the District Collector"- pR Pandian's announcement!

 

திருவாரூரில் பெரியக்குடி பகுதியில் உள்ள ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கிணற்றை நிரந்தரமாக மூட அந்த நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள பெரியக்குடி பகுதியில் ஓஎன்ஜிசி கிணற்றில், கடந்த 2013- ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்டதால், போராட்டத்திற்கு பின்னர், அந்த கிணறு மூடப்பட்டது. அந்த கிணறு மீண்டும் திறக்கப்படவிருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வந்த நிலையில், அந்த கிணற்றை முற்றிலுமாக மூடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மே மாதத்திற்குள் ஹைட்ரோ கார்பன் கிணற்றை முற்றிலுமாக மூடுவதற்கு ஓஎன்ஜிசி நிர்வாகம் ஒத்துக் கொண்டதாக தெரிவித்தார். 

 

மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழியையேற்று, சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக காவிரி விவசாய சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். 

 

Next Story

எரிபொருள் குழாய் உடைந்து விவசாய நிலம் சேதம்!  

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

ONGC Damage to agricultural land due to broken pipe!

 

திருவாரூர் மாவட்டம், எருக்காட்டூர் பகுதியில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர். அதேநேரம் இந்தப்பகுதியைச் சுற்றிலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய்க்கான குழாய்களும் குறுக்கும் நெடுக்குமாகப் பதித்துள்ளனர். அப்பகுதியில் விளைநிலங்கள் வழியாக குடும்பனார் கோயிலிலிருந்து வேளுக்குடி கிராமம் வரை எடுத்துச் செல்லப்படுகிறது.

 

இந்நிலையில் விவசாயி நடராஜன் என்பவரது நிலத்தின் வழியாகச் செல்லும் குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி ஒரு ஏக்கர் அளவிற்கு விளைநிலம் முழுவதும் பரவி, அந்நிலம் பொட்டல் நிலமாக்கியுள்ளது. அதில் விதைக்கப்பட்டிருந்த பச்சை பயிர் மற்றும் உளுந்து பயிர்கள் முழுவதும் சேதமாகியுள்ளன. 

 

இதுகுறித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் சேதமடைந்த விளைநிலத்தைப் பார்வையிட்டனர். அப்போது அந்தக் குழாய் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமானது இல்லை எனக் கூறிவிட்டு அந்த எண்ணெய்யின் மாதிரியைச் சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். வட்டாட்சியர் நடராஜன் நிலத்தை நேரடியாகச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

 

இதுதொடர்பாக விவசாயி கூறுகையில் தற்போது பயிரிடப்பட்ட பயிர் வகைகள் அனைத்தும் சேதமாகி உள்ளன. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எண்ணெய் நிறுவனம் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்கிறார்.