Skip to main content

அரசு பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு; 91 ஆடுகள் பலி

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

One person and 91 goats were passed away collision with government bus

 

வேப்பூர் அருகே அரசு பேருந்து மோதியதில் 91 ஆடுகள் மற்றும் அதனை ஓட்டி வந்த ஒருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் எலவனாசூர்கோட்டையில் இருந்து மேய்ச்சலுக்காக 300 ஆடுகளை திருநெல்வேலி மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த காசிநாதன் என்பவர் வேப்பூர் நோக்கி ஓட்டி வந்துள்ளார். அவரது மகன் லட்சுமணன் (35) இருசக்கர வாகனத்தில் ஆட்டுப்பட்டி நட்டு வைக்கும் வலைகளை எடுத்துக்கொண்டு ஆடுகளையும் ஓட்டி வந்தார். 

 

One person and 91 goats were passed away collision with government bus

 

சேப்பாக்கம் கோமுகி ஆற்றின் பாலம் அருகே ஆடுகளை ஓட்டி வந்து போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து, ஆடு ஓட்டி வந்த லட்சுமணன் மற்றும் ஆடுகளின் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் ஆடுகளை ஓட்டி வந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 91 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. 

 

இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வேப்பூர் போலீசார், உயிரிழந்த லட்சுமணன் உடலையும், ஆடுகளையும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து அரசு பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்தாரா? விபத்து எவ்வாறு ஏற்பட்டது எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ஆடுகளை, கால்நடை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்த பின்பு, ஜே.சி.பி இயந்திரம் உதவியுடன் அந்த செம்மறி ஆடுகள் அடக்கம் செய்யப்பட்டன. ஒரே இடத்தில் 91 ஆடுகள் மற்றும் ஆடு ஓட்டி வந்த நபர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.