விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பதிக்கப்பட்டிருந்த இரும்புக் குழாய்ப் பாதையில், முதியவர் ஒருவர் சிக்கிக்கொண்ட நிலையில், பல்வேறு முயற்சிகளுக்கு பின் மீட்கப்பட்டார்.
பொன்னங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்ற முதியவர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்துக்குச் சென்று திரும்புகையில், வாயிலில் இரும்புக் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்த பாதையில், குழாய்களின் இடுக்கில் சிக்கிக்கொண்டார். இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாகக் கடப்பாரை கொண்டு முதியவரை மீட்க முயச்சித்தனர். ஆனால், முடியாததால் கடைசியில் ஜே.சி.பி கொண்டு இரும்புக் குழாய்கள் வளைக்கப்பட்டு முதியவர் மீட்கப்பட்டார்.