Skip to main content

ஓலா கார் ஓட்டுநர் தாக்கியதில் வாடிக்கையாளர் உயிரிழப்பு... செங்கல்பட்டு அருகே ஒரு அதிர்ச்சி சம்பவம்!

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

Ola car driver hit him... a shocking incident near Chengalpattu!

 

கடந்த வாரம், ஓலா கால் டாக்ஸி டிரைவர் வாடிக்கையாளராக வந்த சிலரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சென்னை அருகே ஓலா கார் டாக்ஸி ஓட்டுநர் தாக்கியதில் வாடிக்கையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Ola car driver hit him... a shocking incident near Chengalpattu!

 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ளது கன்னிவாக்கம் கிராமம். கன்னிவாக்கம் கிராமம் குந்தன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் உமேந்தர். கோவையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்த உமேந்தர், வார இறுதியில் சொந்த ஊரான கன்னிவாக்கத்திற்கு வருவது வழக்கம். எப்பொழுதும்போல் கடந்த வெள்ளிக்கிழமை கன்னிவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார் உமேந்தர். அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சினிமா பார்ப்பதற்காக மனைவி பவ்யா, குழந்தைகள், சகோதரி மற்றும் அவரது இரு குழந்தைகள் உட்பட ஏழு பேருடன் ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளார். பின்னர் படம் பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக மனைவி பவ்யாவின் சகோதரி தேவிபிரியாவின் செல்போனிலிருந்து உமேந்தர் ஓலா கால் டாக்ஸி புக் செய்துள்ளார்.

 

Ola car driver hit him... a shocking incident near Chengalpattu!

 

சிறிது நேரத்தில் அங்கு வந்த இன்னோவா காரில் அனைவரும் ஏறிக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஓலா கார் ஓட்டுநர் ரவி  பயணத்தை தொடங்குவதற்கான ஓ.டி.பி எண்ணை சொல்லுமாறு கேட்டுள்ளார். அப்பொழுது உபேந்தர் தனது செல்போனை சோதித்துப் பார்த்துவிட்டு ஓ.டி.பி வரவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர் ஓ.டி.பி வரவில்லை என்றால் காரை விட்டு இறங்குங்கள் என காட்டமாக கூறியுள்ளார். அதற்கு உபேந்தர் இறங்க முடியாது என தெரிவித்துள்ளார். இப்படி ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. அதன் பிறகு காரை விட்டு இறங்கிய உமேந்தர் காரின் கதவை 'சடார்...' என்று வேகமாக சாத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் ரவி 'ஏன் கார் கதவை வேகமாக சாத்தினாய்' என்று கேட்டு உமேந்தரை அடித்துள்ளார். உமேந்தரும் பதிலுக்கு கையில் இருந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டிலால் ரவியை அடித்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் சரமாரியாக உமேந்தரை ரவி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்தார் உபேந்தர். அங்கிருந்த பொதுமக்கள் உபேந்தரை மீட்டர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர்  உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இந்த சம்பவத்தில் தப்பி ஓட முயன்ற ஆலோ ஓலா கார் ஓட்டுநர் ரவியை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வ.உ.சி நகரைச் சேர்ந்த ஓலா ஓட்டுனர் ரவி மீது கொலை வழக்குப்பதிவு செய்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் செங்கல்பட்டு அருகே ஓலா டாக்சி ஓட்டுநர் வாடிக்கையாளர்களாக வந்த திருடர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஐடி ஊழியர் ஒருவர் ஓலா கார் ஓட்டுநரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.