Skip to main content

ஓலா கார் ஓட்டுநர் தாக்கியதில் வாடிக்கையாளர் உயிரிழப்பு... செங்கல்பட்டு அருகே ஒரு அதிர்ச்சி சம்பவம்!

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

Ola car driver hit him... a shocking incident near Chengalpattu!

 

கடந்த வாரம், ஓலா கால் டாக்ஸி டிரைவர் வாடிக்கையாளராக வந்த சிலரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சென்னை அருகே ஓலா கார் டாக்ஸி ஓட்டுநர் தாக்கியதில் வாடிக்கையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Ola car driver hit him... a shocking incident near Chengalpattu!

 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ளது கன்னிவாக்கம் கிராமம். கன்னிவாக்கம் கிராமம் குந்தன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் உமேந்தர். கோவையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்த உமேந்தர், வார இறுதியில் சொந்த ஊரான கன்னிவாக்கத்திற்கு வருவது வழக்கம். எப்பொழுதும்போல் கடந்த வெள்ளிக்கிழமை கன்னிவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார் உமேந்தர். அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சினிமா பார்ப்பதற்காக மனைவி பவ்யா, குழந்தைகள், சகோதரி மற்றும் அவரது இரு குழந்தைகள் உட்பட ஏழு பேருடன் ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளார். பின்னர் படம் பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக மனைவி பவ்யாவின் சகோதரி தேவிபிரியாவின் செல்போனிலிருந்து உமேந்தர் ஓலா கால் டாக்ஸி புக் செய்துள்ளார்.

 

Ola car driver hit him... a shocking incident near Chengalpattu!

 

சிறிது நேரத்தில் அங்கு வந்த இன்னோவா காரில் அனைவரும் ஏறிக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஓலா கார் ஓட்டுநர் ரவி  பயணத்தை தொடங்குவதற்கான ஓ.டி.பி எண்ணை சொல்லுமாறு கேட்டுள்ளார். அப்பொழுது உபேந்தர் தனது செல்போனை சோதித்துப் பார்த்துவிட்டு ஓ.டி.பி வரவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர் ஓ.டி.பி வரவில்லை என்றால் காரை விட்டு இறங்குங்கள் என காட்டமாக கூறியுள்ளார். அதற்கு உபேந்தர் இறங்க முடியாது என தெரிவித்துள்ளார். இப்படி ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. அதன் பிறகு காரை விட்டு இறங்கிய உமேந்தர் காரின் கதவை 'சடார்...' என்று வேகமாக சாத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் ரவி 'ஏன் கார் கதவை வேகமாக சாத்தினாய்' என்று கேட்டு உமேந்தரை அடித்துள்ளார். உமேந்தரும் பதிலுக்கு கையில் இருந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டிலால் ரவியை அடித்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் சரமாரியாக உமேந்தரை ரவி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்தார் உபேந்தர். அங்கிருந்த பொதுமக்கள் உபேந்தரை மீட்டர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர்  உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இந்த சம்பவத்தில் தப்பி ஓட முயன்ற ஆலோ ஓலா கார் ஓட்டுநர் ரவியை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வ.உ.சி நகரைச் சேர்ந்த ஓலா ஓட்டுனர் ரவி மீது கொலை வழக்குப்பதிவு செய்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் செங்கல்பட்டு அருகே ஓலா டாக்சி ஓட்டுநர் வாடிக்கையாளர்களாக வந்த திருடர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஐடி ஊழியர் ஒருவர் ஓலா கார் ஓட்டுநரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.