Skip to main content

உயிரே உன் விலை என்ன? அலட்சியத்தில் அதிகாரிகள்!

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

 

நெல்லை மாவட்டத்தின் ஆழ்வார்குறிச்சியிலிருப்பவர் மைனாரிட்டி சமூகப்பிரிவைச் சேர்ந்த ஐயப்பன். மனைவி முத்து மாரியம்மாள். கிராமங்களில் மைக் செட் கூலியில் ஜீவனம் நடத்தி வரும் இவர்களுக்கு எம்.பி.ஏ. படிக்கும் மகன் பழனி நாராயணன் மற்றும் பி.காம் படிப்பிலிருக்கும் ரஞ்சிதா என்ற மகளும் உண்டு கஷ்டப்பட்ட நிலையிலும் இருவரின் படிப்பிற்கான செலவை செய்து வருபவர்.

கடந்த 02ம் தேதி அருகிலுள்ள கருத்தப்பிள்ளையூரில் மைக் செட் அமைத்துவிட்டு இரவில் தன் மொபட்டில் அந்த ஒதுக்குப் புற சாலையில் திரும்பி வந்திருக்கிறார். வழியில் வயல் வெளியையும், மேல் ஆம்பூர் குளத்தை இணைப்பதற்கான மதகு அமைப்பதற்கு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு பெரிய சிமெண்ட் பைப் பொருத்தும் வேலை நடைபெற்று வருகிறது. ஆனால் பள்ளம் தொடர்பான எந்த ஒரு எச்சரிக்கைப் பலகையும் தடுப்புச் சுவரையும் காண்ட்ராக்டர் வைக்கவில்லை. பொறுப்பான பொதுப்பணித்துறையும் முக்கியமான இதைக் கவனிக்கவில்லை.

அந்த வழியில் வந்த ஐயப்பனின் மொபட் பக்கத்திலிருந்த மண் குவியலில் மோதி அப்படியே மொபட்டுடன் குழியில் விழ, பெரிய சிமெண்ட் பைப்பில் தலைமோதி நெருகலான பள்ளத்தில் விழுந்தவரின் உயிர் துடி துடித்துப் பறந்திருக்கிறது. அதிகாலையில் அந்தப் பக்கம் விவசாய வேலைக்குப் போனவர்கள் தகவல் தர, ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள் கடையம் போலீசாரும், குடும்பத்தார்களும் வழக்கப்படி கடையம் போலீசிலும் வழக்குப் பதிவானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. பூங்கோதை, ஸ்பாட்டில் எச்சரிக்கை அமைப்புகளில்லாததால் மரணம் சம்பவித்தது கண்டு காரணமான பொதுப்பணித்துறையினரை தொடர்பு கொண்டும் பலனில்லை.

பாதிக்கப்பட்ட ஐயப்பனின் மனைவி முத்து மாரியம்மாளிடம் தன்னால் முடிந்த நிவாரணத் தொகையைத் தனிப்பட்ட முறையில் கொடுத்து உதவிய எம்.எல்.ஏ. பூங்கோதை நடந்தவைகளை நிவாரணம் பொருட்டு அரசு வரை கொண்டு போயிருக்கிறார்.

சாலையைப் பிளந்து பெரிய பள்ளமைமத்து மதகு அமைக்கும் பொதுப்பணித்துறை மக்களின் உயிர் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட வேண்டிய குறைந்தபட்ச தடுப்ப சுவரும் அமைக்கவில்லை எச்சரிக்கை போர்டும் வைக்கவில்லை பறி போனது விலை மதிப்பில்லா ஒரு உயிர். அதற்கான உரிய நிவாரணம் கிடைக்காமல் விடமாட்டேன் என்கிறார் எம்.எல்.ஏ. பூங்கோதை.

பலியான ஐயப்பனின் சகோதரன் கணேசனோ. ஜெனரேட்டர் அமைத்து விட்டு பக்கத்து ஊர் செல்கிறேன் என்று மட்டும் இரவில் தகவல் சொன்னார். மறு நாள் காலை உடலை பார்த்தவர்கள் சொன்ன பிறகுதான் விஷயமே உரைத்தது என்றார் பதற்றத்துடன். பறி போனது கூலி வேலை பார்த்து பிழைப்பவரின் உயிர். உயிர்களில் சாதாரணமானவனின் உயிர் அசாதாரணமானவரின் உயிர் என்ற பேதம் கூடவே கூடாது. அது பேராபத்து. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.