Skip to main content

எழுச்சி மாநாடு ஸ்டிக்கர் ஒட்டிய காரில் குட்கா கடத்தல்; சுற்றி வளைத்த போலீஸ்

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

The object was in the car with the rally sticker; Police surrounded

 

அதிமுக அரசியல் கட்சியின் எழுச்சி மாநாடு ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று சமயபுரத்தில் இருந்து லால்குடி வழியாக டால்மியாபுரத்துக்கு குட்கா பொருட்கள் கடத்திச் செல்லப்படுவதாக லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து போலீசார் மற்றும் சமயபுரம் காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் மாலதி ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சமயபுரம் அருகே மாடக்குடியில் உள்ள திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் எழுச்சி மாநாடு ஸ்டிக்கர் ஒட்டிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில் குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. 

 

இதைத் தொடர்ந்து குட்கா பொருட்களையும், காரையும் பறிமுதல் செய்த போலீசார் புகையிலை பொருட்களை கடத்தி வந்த இனாம் சமயபுரம் ஒத்தக்கடையைச் சேர்ந்த சஞ்சீவி மகன் 27 வயதான கமல் என்கின்ற யுவனேஸ்வரன் என்பவரைப் பிடித்து விசாரணை செய்தனர். இதனையடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ. 2½ லட்சம் ஆகும்.

 

மேலும் இந்த புகையிலை பொருட்கள் சமயபுரம், லால்குடி, டால்மியாபுரம், திருச்சி, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் படுகொலை; பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Armstrong incident Bahujan Samaj party struggle

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்ததுள்ளது. இந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Armstrong incident Bahujan Samaj party struggle

கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த சென்னை கூடுதல் காவல் ஆனையர் அஸ்ரா கார்க் காரை பகுஜன் சமாஜ் கட்சியினர் வழிமறித்து போராட்டம் நடத்தினர். 

Armstrong incident Bahujan Samaj party struggle

மேலும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வெளியே அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இயக்குநர் பா. ரஞ்சித் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது. 

Next Story

குடும்பம் நடத்திய பெண் பிரிந்து சென்றதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
tragic decision taken by  man because woman  away

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பொம்மன்பட்டி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவ்வப்போது வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றித் திரிந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஒருவருடத்துக்கு முன்னர், சேலம் மாவட்டம், பூலாம்பட்டியைச் சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவரைக் கூட்டி வந்து மணிகண்டன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது அவருடன் குடும்பம் நடத்தி வந்த பெண் கடந்த 2-ஆம் தேதி சண்டையிட்டுக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, மணிகண்டனின் தந்தை பெரியசாமி அளித்த புகாரின் பேரில், வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.