Skip to main content

காவல்துறை உயர் அதிகாரிகளை ஏமாற்றி பணம் பறிக்கும் வடநாட்டு இளைஞர்கள்!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

Northern youths cheating police officers and  money

 

தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையை சேர்ந்த உயரதிகாரிகளின் மற்றும் காவலர்கள் ஃபேஸ்புக் ஐடியை போலியாக உருவாக்கி அவர்களது நண்பர்கள் உறவினர்களுக்கு ஃபிரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்து அதன் மூலம் நூதன் முறையில் பணம் பறிக்கப்படும் சம்பவம் சமீபகாலமாக நடைபெற்றுவருகிறது. 

 

வட நாட்டு இளைஞர்கள், தமிழகத்தின் காவல்துறை உயரதிகாரிகள் பெயரில் போலியாக ஃபேஸ்புக் கணக்கை துவங்கி அதன்மூலம் ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து அவர்களை நண்பர்களாக்கிக்கொண்டு, காவல்துறை அதிகாரி கஷ்டத்தில் இருப்பதுபோல் பேசி உறவினர்களிடம் கூகுள் பே மூலம் பணம் செலுத்த சொல்லும் வடநாட்டு கும்பல் நேற்று திருவண்ணாமலையில் டி.எஸ்.பி ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற முகமது பசுல்லாவின் பேஸ்புக் போலி ஐடி மூலம்  உறவினர்களுக்கு பிரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்து உறவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூகுள் பே-யில் பணம் செலுத்த சொல்லி கேட்டிருக்கிறார்கள். 

 


இந்தத் தகவல் சென்னையிலிருந்து மாலை ஆறு மணி அளவில் காவல்துறையைச் சேர்ந்த அவரது உறவினர் மூலம் தெரியவரவே சுதாரித்துக்கொண்டதால் டி.எஸ்.பி  முகமது பசுல்லா உறவினரிடம் பணம் செலுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். 

 


இதனால் அவரது உறவினரின் பணம் தப்பியது இதுதொடர்பாக முன்னாள் டிஎஸ்பி முகமது பசுல்லா திருவண்ணாமலை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த மாதம் முதல் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் இதுபோல் சம்பவம் சாதாரணமாக நடைபெற்று வருகிறது. முனிரத்தினம் டி.எஸ்.பி, ஜீவானந்தம் டி.எஸ்.பி, வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர், அம்பத்தூர் உதவி ஆய்வாளர் விஜயகுமார், ஆகியோரது ஃபேஸ்புக் போலி ஐடி மூலம் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கஷ்ட சூழ்நிலை உள்ளதாக தெரிவித்து பணம் கேட்கும் கும்பல் ஊடுருவி வருகிறது. காவலர்களின் உறவினர்கள் நண்பர்கள் இதன்மூலம் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் காவல்துறை சைபர் கிரைம் உடனடியாக இதன் பேரில் நடவடிக்கை எடுக்க அவர்களது உறவினர்கள் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.