Skip to main content

தொடர் கைவரிசை; வசமாக சிக்கிய வடமாநில கும்பல்

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

Northern robbers who stole from  tamilnadu many places

 

அரியலூர் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை டவுன்ஷிப் வளாக குடியிருப்பு பகுதியில் கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவு ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் 80 பவுன் நகைகளை திருடிச் சென்றது சம்பந்தமாக அரியலூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 142/2022 u/s 457, 380 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இந்த திருட்டு தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தும், சைபர் கிரைம் தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்ததில் இச்சம்பவத்தில், மத்திய பிரதேச மாநிலத்தில் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணன் சுந்தர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான், அப்துல்லா ஆகியோரின் உத்தரவின் பேரில் மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு ஆய்வாளர்கள் சகாய அன்பரசு, அன்பழகன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பாலாஜி, நந்தகுமார் மற்றும் போலீசார் விசாரணை செய்ததில் தார் மாவட்டத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் மேற்படி தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பதும், அவர்கள் மீண்டும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவதற்காக தமிழ்நாட்டில் மீண்டும் வந்திருப்பது தெரியவந்தது. 

 

இதனால் அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் தொழிற்சாலை பகுதியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று (26.5.2022) காலை 11 மணியளவில் தனிப்படை போலீசார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த நான்காபெளரியா, காளியா, அமீர்,  சர்தார்ஹீரு ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.  மேலும் அவர்களிடமிருந்து அரியலூர் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் சுமார் 80 சவரன் தங்க நகைகளை வீட்டை உடைத்து இரும்பு பயன்படுத்திய ராடுகள் திருடுவதற்கு கட்டிங் பிளையர் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர். அத்துடன் கடந்த 12ஆம் தேதி தூத்துக்குடி அனல்மின் ஊழியர் குடியிருப்பில் வீடுகளை உடைத்து திருடிய சுமார் மேலும் 350 கிராம் எடையுடைய வெள்ளிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.  

 

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில்  மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி மத்திய பிரதேசம், புனே, போபால் குஜராத், கர்நாடக மற்றும் ஆந்திர உள்ளிட்ட பல மாநிலங்களில் பல இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.  மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரையும் இன்று (26.5.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.