'' None of the already serving priests have been removed '' - Chief Minister MK Stalin's explanation!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் திட்டத்தின் மூலம், அர்ச்சகர் பயிற்சி முடித்த 54 பேருக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 14 ஆம் தேதி பணி நியமன ஆணையை வழங்கினார்.

Advertisment

சென்னை ஆர்.டி.எம்.புரத்தில்கடந்த14 ஆம் தேதிஅனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், அர்ச்சகர் பயிற்சி முடித்த24 பேர் உட்பட 58 பேருக்கு,பணி நியமன ஆணையைத் தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.

சென்னையில் இன்று,அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் குறித்துஇந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுசெய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.அப்பொழுதுபேசிய அவர், ''முறையாகப் பயிற்சிபெற்ற 58 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 58 அர்ச்சகர்கள் நியமனம் குறித்து சிலர் அவதூறாக தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சில ஊடகங்களும், ஒரு சில முகநூல் நண்பர்களும் இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்கி, ஏதோ அர்ச்சகர்களுக்கு எதிரான அரசுபோல்சித்தரிக்க நினைக்கிறார்கள். பதவியேற்றஇந்த மூன்று மாதங்களில் முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்ததைஅனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்துசமயஅறநிலையத்துறையைப் பொறுத்தவரையில் இந்துக்கள், இந்துத்துவா என்பதைக் கையில் எடுப்பவர்களுக்குவேலையில்லாமல் போய்விட்டது என்ற காரணத்திற்காக இப்பொழுது அர்ச்சகர் நியமனப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

Advertisment

யாரையும் கோவிலில் இருந்துவெளியேற்றும் எண்ணம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த நியமனமும் இல்லாமல் சிதிலமடைந்து கிடந்த இந்துசமய அறநிலையத்துறைக்கு முதல்வர் கொடுக்கும் சீர்திருத்தங்களுக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து வலுசேர்க்க வேண்டும்'' என்றார்.

'' None of the already serving priests have been removed '' - Chief Minister MK Stalin's explanation!

இந்நிலையில் தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலினும் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். ''தமிழகக் கோவில்களில் ஏற்கனவே பணியிலுள்ளஅர்ச்சகர்கள் யாரும் பணியிலிருந்து நீக்கப்படவில்லை. முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டுவந்தசட்டம் நடைமுறைக்கு வராமல்இருந்தது. அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்'' என விளக்கமளித்து பேரவையில் பேசியுள்ளார். அதேபோல், அர்ச்சகர் நியமனத்தில் சமூக நீதியைப் பாழ்படுத்தும் வகையில் தவறான கருத்துகள் பரப்பப்படுவதாகக் குற்றச்சாட்டையும் முதல்வர் முன்வைத்துள்ளார்.