Skip to main content

கடற்புலிகள் இல்லை... இலங்கை வழியாக பயங்கரவாதிகள் ஊருவல்... கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனை தீவிரம்!

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

இலங்கை கடலில் கடற்புலிகள் இல்லாத நிலையில் தற்போது அடிக்கடி கடத்தல்கள், பயங்கரவாதிகள் ஊடுருவல் என்று இந்தியாவுக்கான அனைத்து அச்சுருத்தல்களும் தமிழ்நாட்டு கடல் வழியாகவே தொடங்கியுள்ளது. தற்போது 6 பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தமிழ்நாட்டில் கோவையில் ஊடுருவியுள்ளதாக கூறி கார்களின் எண்கள், 3 பேரின் படங்களையும் போலிசார் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில்தான் கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனச் சோதனைகள் தீவிரமடைந்துள்ளது.

 

police

 

விடுதலைப்புலிகள் கடலில் பாதுகாப்புக்கு சுற்றி வரும்போது இந்தியா பாதுகாக்கப்பட்டது. அவர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டு கடல் வழியாக எந்த அச்சுருத்தலையும் செய்ய முடியவில்லை. இனி அவர்கள் இல்லை என்பதால் பயங்கரவாதிகளும், எதிரி நாடுகளின் அச்சுருத்தல்களும் தமிழக கடலவழியாகவே நடக்கும் என்று பன்னாட்டு கூட்டு சதியால் விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழர்களையும் கொன்று குவித்தபோது ஒரு முன்னாள் கடற்படை வீரர் சொன்னார். அவர் சொன்னது போலவே நடக்க தொடங்கி உள்ளது.

அதாவது சர்வதேச கடத்தல்கள் அனைத்தும் இலங்கை வந்தே வெளியேற்றப்படுகிறது. போதைப் பொருட்கள், தங்கம் அனைத்தும் இலங்கை வழியாகவே வெளியேறும். 10 ஆண்டுகளுக்கு முன்புவரை இலங்கைக்கு பெண்களை சிறு வியாபாரிகளாக அழைத்துச் சென்ற கடத்தல்காரர்கள் அங்கிருந்து திரும்பி வரும் போது தங்கம் போன்ற கடத்தல் பொருட்களை கருப்பு கார்பன் பேப்பர்களில் சுற்றி பெண்களின் மர்ம உறுப்புகளில் மறைத்து வைத்து விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பினார்கள். கருப்பு கார்பன் பேப்பர் விமான நிலையங்களில் உள்ள ஸ்கேனர்களில் தெரியாது என்பதால் அப்படி செய்யப்பட்டது. அந்த பெண்கள் விமானநிலையத்தில் இருந்து வெளியே வரும்போது அவர்களுக்கு கொடுக்கப்படும் தகவல்களின் படி அந்த கடத்தல் பொருள் கொண்டு போய் சேர்க்கப்படும். இதற்காக அவர்களுக்கு ஒரு முறை சென்று வர பயணக்கட்டணம் போக ரூ. 5 ஆயிரம் வரை சன்மானம் வழங்கப்பட்டது. 

 

police

 

அதன் பிறகு கடலில் கடற்புலிகள் இல்லை என்ற நிலையில் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களும், தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களும் தமிழக கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதேபோல கஞ்சா வாங்க இலங்கையில் இருந்து பலர் சொந்த விசைப் படகுகளில் வந்துதங்கி இருந்து வாங்கிச் சென்றனர். இப்படி அடிக்கடி கடத்தல் வணிகம் இந்திய கடலில் நடக்கத் தொடங்கியது. வேதாரண்யம் அருகே கஞ்சாவுக்கு பணம் கொடுக்கவில்லை என்று இலங்கை இளைஞர் ஒருவரை தனிமைச் வீட்டுச்சிறையில் 18 மாதங்கள் வைத்திருந்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்புதான் நடந்தது. 

இப்படி அடிக்கடி கடத்தல் சம்பவங்கள் கடற்கரையில் நடக்கிறது. ஆனாலும் சில காவல் துறையினர் அவற்றை விரட்டிப் பிடிக்கத்தான் செய்கிறார்கள். அதையும் மீறி இப்படி நடந்துவிடுகிறது. இந்த நிலையில்தான் தற்போது இலங்கையை சேர்ந்த 5 பேர், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் என 6 பேர் கொண்ட பயங்கரவாதிகள் இலங்கையில் இருந்து தமிழக கடல்வழியாக வந்து தமிழ்நாட்டு பதிவு  எண் கொண்ட கார்களில் கோவை மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ளனர் என்ற தகவலை காவல் துறையினர் படங்களுடன் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த தகவலையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, திருப்புனவாசல் உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு குழும போலிசார் ஆய்வாளர் அன்னலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் ஜவகர், ராஜ்குமார் மற்றும் போலிசார் மும்பாலை சோதனைச் சாவடியில் சாலைகளில் தீவிர வாகன சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் கோடியக்காடு, அம்மாபட்டிணம் பகுதியலும், கடலுக்குள்ளும் ரோந்துப் பணிகளில் தீவிரம்காட்டியுள்ளர். இதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் கடலோரங்களில் தீவிர சோதனைகள் செய்யப்பட்டு வருவதுடன் உள் மாவட்டங்களிலும் முக்கிய சாலைகள், முக்கிய இடங்களிலும் சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.