Skip to main content

“ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எந்த புகாரும் வரவில்லை” - அமைச்சர் சிவசங்கர்

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

No complaint has been received about omni buses charging too much  Minister Sivashankar

 

இந்த வருடம் தீபாவளி பண்டிகை வரும் 12 ஆம் தேதி (12.11.2023) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

 

அதனை தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தீபாவளி பண்டிகையொட்டி வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று (09.10.2023) 2734 பேருந்துகள் இயக்கப்பட்டு ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 700 பேர் பயணம் செய்து சொந்த ஊர் சென்றுள்ளனர். அதே போல் இன்றைக்கு இதுவரை 1442 பேருந்துகள் இயக்கப்பட்டு 68 ஆயிரத்து 910 பேர் பயணம் செய்துள்ளனர். இன்றைக்கு மொத்தமாக 3200 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

 

தீபாவளியின் போது கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக அளவிலான பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பான முறையில் பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேருந்து முன்பதிவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் கோயம்பேடு பேருந்து நிலையம் மட்டுமல்லாமல் தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் உள்ளிட்ட பேருந்து நிலையத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்