Skip to main content

அதிதீவிரப் புயலாக மாறிய நிவர்... கடலூரில் இருந்து 90 கிமீ தொலைவில் மையம்!

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

mbn

 

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்றுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி இன்று மதியம் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புயல் எதிர்பார்த்த வேகத்தில் பயணிக்காத காரணத்தால், எங்கே கரையைக் கடக்கும் என்று உறுதியாகத் தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால், கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், 'நிவர்' புயல் அதிதீவிரப் புயலாக மாறியுள்ளதாகவும், கடலூரில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் 'நிவர்' புயல் நிலை கொண்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் மணிக்கு 16 கிமீ வேகத்தில் பயணித்து கரையை நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொடிக்கு நொடி 'நிவர்' புயல் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து கரையை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கஜா புயலின் தாண்டவம், வாஜ்பாய் மரணம், எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு, ஆணவக்கொலைகள்... ஷாக்ஸ் 2018 பகுதி 2

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
vajpaayee


முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் உடல்நிலை சரியில்லாமல் ஆகஸ்ட் 16ஆம் தேதி காலமானார். 
 

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரியோ நகரத்தின் 200 வருட பழமைவாய்ந்த ராயல் அருங்காட்சியம் செப்டம்பர் 2ஆம் தேதி தீக்கிரையானது.
 

கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி பிஹாரிலுள்ள ஒரு மருத்துவமனையில் 11 வயது சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். அவரின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்காததை அடுத்து இறந்த மகனின் உடலை தோளில் சுமந்தபடி வீட்டுக்கு கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

உலகின் மிகவும் வயதான மோபி டால்பின் தன்னுடைய 58வது வயதில் காலமானது.  
 

ranjan gogai

 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி தந்ததையடுத்து, பம்பை நிலக்கல் போன்ற பகுதிகள் போராட்டக்களமாக மாறியது.​​​


கடந்த அக்டோபர் 9ஆம் தேதி ஆளுநர் மாளிகையின் புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 

பாரம்பரிய நெல் விதைகளை மீட்டு எடுத்த நெல் ஜெயராமன், கடந்த நவம்பர் மாதம் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாத சிகிச்சையை அடுத்து டிசம்பர் 6ஆம் தேதி காலமானார்.

 

amal hussein



ஏமனில் மனிதாபிமானம் அழிந்துவிட்டது என்பதை அடையாளப்படுத்தும் விதமாக அமல் ஹுசைன் என்கிற 7 வயது சிறுமியின் புகைப்படம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அச்சிறுமி நவம்பர் 1ஆம் தேதி காலமானார்.
 

பல சூப்பர் ஹீரோக்களின் வடிவங்களை உருவாக்கிய மார்வெல் காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ (95) உடல்நலக்குறைவால் கடந்த நவம்பர் 12ஆம் தேதி மறைந்தார். 
 

கடந்த நவம்பர் மாதத்தில் தமிழக டெல்டா பகுதிகளில் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடியது. இந்த புயாலால் பல விவசாயிகள் வீடுகள் இன்றி முகாமுக்கு தள்ளப்பட்டனர். சில கிராமங்களில் இன்றுவரை மின் வசதி வரவில்லை.
 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சூடைக் காந்த பள்ளி எனும் கிராமத்தைச்  சேர்ந்த சுவாதியும்,  இளைஞர் நந்தீஸ் என்பவரும் பல எதிர்ப்புகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். திருப்பூரில் தங்களது வாழ்க்கையை நடத்திவந்த இருவரும் 13.11.2018 அன்று கர்நாடகா, மாண்டியா பகுதியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர். உடற்கூராய்வில் இருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், சுவாதி மூன்றுமாதக் கர்ப்பிணி என்பதும் தெரியவந்தது. இதுபோல் இன்னும் சில ஆணவக்கொலைகள் நடந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

கடந்த நவம்பர் 26ஆம் தேதி எழுத்தியல் அறிஞர், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்.
 

gaya cyclone



கஜா புயல் பாதிப்பை உணர்ந்து பல மக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கை கொடுத்தார்கள். ஆனால், இக்கட்டான நிலையிலும் பாதிக்கப்பட்ட ஊர்களை சேர்ந்த சில வியாபாரிகள் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.200க்கும், 1 மெழுகுவர்த்தி ரூ.20க்கும் விற்ற அநியாயங்களும் நடந்தது.
 

தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் விஷால் 7கோடிக்கு முறைகேடு செய்துவிட்டார் என்று விஷாலின் எதிரணி தியாகராய நகரிலுள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். இதனை தொடர்ந்து அடுத்த நாள் அந்த பூட்டை உடைக்க வந்த விஷாலுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் விஷால் கைது செய்யப்பட்டார்.

 

prabanjan

 


வானம் வசப்படும், மானுடம் வெல்லும் போன்ற தமிழ் நாவல்களை எழுதிய எழுத்தாளர் பிரபஞ்சன் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார். 
 

ராயபுரம் ஐந்து ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன், கடந்த டிசம்பர் 22ஆம் தேதி காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் முதல் பலர் தங்களது அஞ்சலியை தெரிவித்தனர்.
 

எழுத்தாளரும் தமிழ் அறிஞருமான க.ப.அறவாணன் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி சென்னையில் காலமானார்.
 

தெலுங்கானாவை சேர்ந்த பெண் அனுராதா என்பவர் பெற்றோரை எதிர்த்து கலப்பு திருமணம் செய்துகொண்டார். அதனால் கோபமடைந்த அனுராதாவின் பெற்றோர், அவரை வீட்டிற்கு கடத்தி வந்து தீக்கிரையாக்கி அந்த சாம்பலை நதியில் கலந்தனர். பின்னர், அந்த பெற்றோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இது மட்டும் இந்த வருடத்தில் நடந்த ஆணவக்கொலை அல்ல, தெலுங்கானாவிலேயே மூன்று பயங்கரமான ஆணவக்கொலைகள் இந்த வருடத்தில் நடந்திருக்கிறது.
 

மருத்துவ ஊழியர்களின் கவனக்குறைவினால் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஹெச்ஐவி வைரஸ் பாதித்த இரத்தத்தை ஏற்றினர். இதனால் அப்பெண்ணுக்கு ஹெச் ஐ வி தொற்று ஏற்பட்டது. இதை எதிர்த்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போதுதான் அதேபோல் எங்களுக்கும் நடந்துள்ளது என மெலும் சில பெண்கள் புகார் அளித்தனர். இது தமிழகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 

முந்தைய பகுதி:

காவிரி தண்ணீர் என்றால் கண்டிப்பாக கிடைக்காது... கண்ணத்தை தொட்ட கவர்னர்... - ஷாக்ஸ் 2018 பகுதி 1

 

 


 

Next Story

அமெரிக்காவில் ப்ளோரன்ஸ் புயலால் வெள்ளம்...

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
florence


கடந்த சில நாடகளாக அமெரிக்காவை புறட்டிபோட்ட ப்ளோரன்ஸ் புயலால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக துறைமுக நகரமான வில்மிங்டன் நகரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு சுமார் 17பேர் பலியாகியுள்ளனர். இந்த புயலால் கரோலினா உள்ளிட்ட பல மாகாணங்களில் பலத்த பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், பல இடங்களில் ஆறுகளில் வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடுகிறது. கடந்த வெள்ளி முதல் பல இடங்களில் வரலாறூ காணாத கனமழை பெய்து உள்ளது. இதுவரி 75 செண்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. அப்பகுதிகளில் வசித்துவரும் ஆயிரக்கணக்கானோர், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

மழை பாதிப்பில் சிக்கிதவிக்கும் பொதுமக்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் குழுவினர்களுக்கு அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக 13 ஆயிரத்து 500 ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. கேப் பியர் மற்றும் லிட்டில் ஆற்றங்கரைகளில் வசித்துவரும் 7,500 பேர் உடனடியாக வெளியேற அறிவறுத்தப்பட்டுள்ளது.