nivar cyclone meteorological department rains peoples

"அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடந்த 'நிவர்', புயலாக வலுவிழந்தது. அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக 'நிவர்' மேலும் வலுவிழக்கும். புதுச்சேரிக்கு 85 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு 95 கி.மீ. தொலைவிலும் 'நிவர்' புயல் மையம் கொண்டுள்ளது. நிலப்பரப்பு வழியாக நகரும் 'நிவர்', அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். நிலப்பரப்பு வழியாக உள்ள 'நிவர்', திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் உள்ளது." இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் காலை 07.00 மணி முதல் 11.00 மணி வரை 8.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.