Skip to main content

என்.ஜி.கே. படம் ஓடாததால் பணத்தை திருப்பி கேட்ட தியேட்டர் அதிபர் மீது தாக்குதல்

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

 

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில்  பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த என்.ஜி.கே. திரைப்படத்தை சிவகாசியில் திரையிட்டார் காளிமுத்து. படம் தோல்வி அடைந்து  நஷ்ட மடைந்ததால் திரையரங்கும் உரிமையாளர் காளிமுத்து, விரக்தியடைந்தார்.  

ச்

என்.ஜி.கே. படத்திற்கு கொடுத்த  முன் பணம் 4 லட்சத்தில் மீதி 3.05 லட்சத்தை சி.எல்.என். திரைப்பட நிறுவனத்திடம் கேட்டுள்ளார்.  இது தொடர்பான வாக்குவாதத்தில் படநிறுவனத்தினர் காளிமுத்துவை தாக்கியுள்ளனர். இதையடுத்து காளிமுத்துவின் புகாரின் பேரில் சி.எல்.என். உரிமையாளர் பிரவீன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்