Skip to main content

13 பெண்கள்; 30 பாதிரியார்கள் - பெனிட்டிக் ஆன்டோ வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள் 

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

next shocking information in the benedict anto case

 

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதிக்கு உட்பட்ட கொல்லங்கோடு சூழால் பாத்திமா நகரைச் சோ்ந்தவா் பாதிரியார் பெனிட்டிக் ஆன்டோ. இவர் சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் தவறாகப் பேசி நெருங்கிப் பழகியதாகக் கூறி பல்வேறு வீடியோக்கள் வெளியாகின. நூற்றுக்கணக்கான பெண்களை இதுபோல திட்டம்போட்டு ஏமாற்றியுள்ளதாகவும் புகார் கூறப்பட்டது.

 

முதலில் பெண்களிடம் நல்லவர் போல பழகி அறிமுகமாகிக் கொள்ளும் பாதிரியார், நாளடைவில் தனது உண்மையான முகத்தைக் காட்டத் தொடங்கிவிடுவார். மெசேஜில் வசியம் செய்யும் வகையில் பேசி அவர்களை நம்ப வைத்து தன் வலையில் எளிதில் வீழ்த்திவிடும் பாதிரியார்., அவர்களுடன் தனியாக இருப்பதை பத்திரமாக வீடியோவாகவும் ஃபோட்டோவாகவும் எடுத்து வைத்திருந்துள்ளார். இதைத் தனது லேப்டாப்பில் பதிவேற்றம் செய்துகொண்ட பாதிரியார், யாருமில்லா தனியறையில் அமர்ந்து இதையெல்லாம் பார்த்து ரசிப்பது வழக்கமாம். அதுபோல், சம்பந்தப்பட்ட பெண்களை மீண்டும் கூப்பிட்டு மிரட்டி காரியம் சாதித்துக் கொண்டதாகவும் புகார் கூறப்பட்டது.

 

இப்படி பல பெண்களிடம் ஃபோனிலும் நேரிலும் பேசியுள்ள பாதிரியார்., அவர்களை தான் விரும்புவதை  போல செய்யச் சொல்லி அனைத்தையும் ஸ்க்ரீன்ஷாட்டுகளாக எடுத்து வைத்துக் கொண்டிருந்துள்ளார். 200 வீடியோக்களை தாண்டி பாதிரியார் பாதுகாத்திருந்த ஆபாச விளையாட்டுகள் அனைத்தும் சமீபத்தில் லீக்காகி தமிழகத்தையே அதிர வைத்தது. வீடியோ வெளியானதும் பாதிரியார் தலைமறைவானார். இதையடுத்து, அவரை தீவிர தேடுதலுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். பாதிரியார் பெனிட்டிக் ஆன்டோ போலீசில் சிக்கியிருக்கும் நிலையில், அவரது ஆபாச லீலைகள் சங்கிலி தொடா் போல் நீண்டுகொண்டே போவது போலீசாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

சைபா் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, "உண்மையை சொல்ல மறுத்த பாதிரியார்., பெண்கள் யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களே விருப்பப்பட்டுத்தான் அப்படி என்னிடம் நடந்து கொண்டார்கள்" எனக் கூறியுள்ளார். போலீசாரின் 9 மணி நேர தீவிர விசாரணையில் இதை மட்டும் தான் கூறியிருக்கிறார். இந்த நிலையில் நாகர்கோவில் ஜே.எம். 2 மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் நாகர்கோவில் சப்-ஜெயிலில் பாதிரியார் அடைக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடர்ந்து, பாதிரியாரின் தொடா்பில் இருந்த இளம் பெண்களும் குடும்ப பெண்களும் மற்ற இளம் பாதிரியார்களும் கலக்கத்தில் உள்ளனர்.

 

இது குறித்து நம்மிடம் பேசிய மலங்கரை கத்தோலிக்க சபையை சேர்ந்த மூத்த பாதிரியார் ஒருவர், "பெனிட்டிக் ஆன்டோவை மலங்கரை கத்தோலிக்க சபையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்தவுடன் அவர் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து கோட்டயத்தில் இருக்கும் மலங்கரை கத்தோலிக்க தலைமை சபைக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட இளம் பாதிரியார்கள் சென்று இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பெனிட்டிக் ஆன்டோவுடன் சேர்ந்து திருத்தொண்டர் பட்டம் பெற்று பல்வேறு சபையில் பணியில் இருப்பவர்கள். இந்த விசயத்தில் இவா்களுக்கும் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அவா்களாக முன்வந்து நேரில் விளக்கம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. எனக்கு தெரிந்தளவில் இளம் வயதிலே பாலியல் புகாரில் சிக்கிய முதல் பாதிரியார் இவா்தான். இவரால் ஒட்டு மொத்த மலங்கரை கத்தோலிக்க சபைக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. பெனிட்டிக் ஆன்டோவை தற்காலிக நீக்கம் போதாது திருத்தொண்டர் பட்டத்தை திரும்ப பெற்று நிரந்தரமாக நீக்க வேண்டும்" என்றார் மலங்கரை கத்தோலிக்க சபையை சேர்ந்த மூத்த பாதிரியார்.

 

இந்த நிலையில் சைபர் க்ரைம் போலீசாரால் கைப்பற்றப்பட்டு இருக்கும் பாதிரியாருடைய 3 செல்போன்களில், ஒரு வாட்ஸ் அப் க்ரூப்பில் 30 பாதிரியார்களும் 13 பெண்களின் பெயர்களும் இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. இந்த பெண்கள் யார் யார் என்ற விசாரணையும் தீவிரமாகியிருக்கிறது. அந்த க்ரூப்பில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை தவிர வேறு எதுவும் பகிரப்படவில்லையாம். அதில் பள்ளி, கல்லூரி மாணவிகளும் குடும்ப பெண்களின் வீடியோக்களும்தான் இருக்கின்றன எனும் தகவல் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

 

இந்த நிலையில் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த பிரபல பெண் மருத்துவா் ஒருவர் பாதிரியாருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர், பாதிரியார் பணிபுரிந்த சபைகளுக்கு அடிக்கடி வந்துள்ளார். அந்த பெண் மருத்துவர் இன்னொரு கிறிஸ்தவ பிரிவை சோ்ந்தவர். இந்த மருத்துவர், பாதிரியாரால் பாதிக்கப்பட்டு கருவுற்ற பெண்களின் கருவை கலைக்க உடந்தையாக இருந்திருப்பார் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதற்கும் போலீஸ் விசாரணையில் முடிவு தெரிந்துவிடும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.