Skip to main content

 புதிதாக தொடங்கப்பட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழ்நாடு அமைப்பு!

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

Newly launched United Farmers Front Tamil Nadu Organization!

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டத்திற்கு எதிராகப் பல மாதங்களாக டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி என்ற தமிழ்நாடு அமைப்பு செப்டம்பர் 21- ஆம் தேதி அன்று ஈரோட்டு மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. 

 

கடந்த மாதம் 26- ஆம் தேதி அன்று டெல்லி சிங்கு எல்லையில் நடைபெற்ற மாநாட்டில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் கிளைகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உருவாக்குவது என விவசாய அமைப்புகள் முடிவெடுத்தது. அதன் தொடர்ச்சியாக,  ஈரோடு பெரியார் மன்றத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட மாநாடு  நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலம் புதிதாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழ்நாடு அமைப்பு உருவாக்கப்பட்டது. வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய அளவில் வருகின்ற செப்டம்பர் 27- ஆம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

 

இதற்கு ஆதரவாகத் தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளராக சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

அவர் கூறுகையில், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளை வழி நடத்தும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் வேண்டுகோள் படி தமிழ்நாட்டிலும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழ்நாடு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 64 விவசாய அமைப்புகள் சேர்ந்துள்ளன. செப்டம்பர் 27- ஆம் தேதி அன்று நாடு தழுவிய போராட்டத்திற்குத் தமிழ்நாடு அமைப்பு முழு ஒத்துழைப்பு தர இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட உள்ளோம். 

 

மத்திய அரசு வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை டெல்லியில் மட்டுமல்ல, இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெறும். உத்தரபிரேதசம் மற்றும் உத்தரகண்ட்டில் நடைபெறவுள்ள தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைய வேண்டும் என்பதை அம்மாநில மக்களிடையே வலியுறுத்த உள்ளோம். கார்ப்பரேட்களின் ஆதரவாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் விவசாயிகளுக்கு எதிராக உள்ள மத்திய பாரதிய ஜனதா கட்சியும் வேளாண் சட்டங்கள் குறித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி  அமைப்போடு விவாதிக்கத் தயாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.