Skip to main content

புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகள் ஸ்டிரைக்!

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் வியாழக்கிழமை ஒருநாள் நடந்த லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், 100 கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம் அடைந்தன.

மத்திய அரசு, திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை நாடு முழுவதும் செப். 1ம் தேதி முதல் அமலுக்குக் கொண்டு வந்தது. இந்த புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு முன்பை விட பல மடங்கு அபராத கட்டணம் மற்றும் வாகனப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு நாடு முழுவதும் லாரி அதிபர்களிடையே கடும் எதிர்ப்பு நிலவுகிறது. மேலும், கனரக வாகன டயர்கள் உள்ளிட்ட உதிரி பாகங்கள் விலை ஏற்றம், டீசல் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் அதிகரிப்பு, இன்சூரன்ஸ் பிரிமீயம உயர்வு உள்ளிட்ட காரணங்களால் லாரி தொழில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 

சரக்கு போக்குவரத்தில் லாரிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. தொழில் நசிவு காரணமாக இந்தியா முழுவதும் 15 லட்சம் லாரிகளும், தமிழகத்தில் 2 லட்சம் லாரிகளும் போதிய சரக்குகள் புக்கிங் கிடைக்காததால் வேலையின்றி நிறுத்தப்பட்டு உள்ளன. இதையே நம்பியிருக்கும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் உள்ளது. இப்படியான சூழலில் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் லாரி அதிபர்களிடையே பேரிடியாய் இறங்கியுள்ளது. இதையடுத்து மோட்டார் வாகனத் தொழிலை மேம்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழில் நசிவுக்குக் காரணமான புதிய சட்டத்திருத்ததை திரும்பப் பெறக்கோரியும் லாரி போக்குவரத்தாளர்கள் சார்பில் நாடு முழுவதும் வியாழக்கிழமை (செப். 19) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.

new motor vehicle law against lorry owners strike in all over india


இதனால் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் லாரிகள் இயக்கப்படவில்லை. சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தமிழகத்தில் மட்டும் இன்று 4 லட்சம் லாரிகள் ஓடவில்லை. ஏற்கனவே சரக்குகள் எடுத்துச் செல்லப்பட்ட இடத்திலேயே லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. சேலத்தில் செவ்வாய்பேட்டை, லாரி மார்க்கெட், ரயில்வே கூட்ஸ் ஷெட் மற்றும் சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய ஜவுளிகள், ஜவ்வரிசி, சுண்ணாம்புக்கல், மளிகை பொருள்கள் லாரிகளில் ஏற்றப்படாமல் கிடங்குகளில் தேங்கிக் கிடந்தன. சரக்கு போக்குவரத்து முடங்கியதால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் செவ்வாய்பேட்டை பஜார் இன்று வெறிச்சோடிக் காணப்பட்டது.

இதுகுறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் சென்னகேசவன் கூறுகையில், ''ஒருநாள் வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் 100 கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 10 கோடி ரூபாய் சரக்குகள் தேங்கி இருக்கின்றன. சரக்கு ஏற்றிய லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணிக்கு மேல் அந்த லாரிகள் இயக்கப்படும். தமிழகத்தில் 85 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை,'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.