Skip to main content

புதிய வேளாண் சட்டங்கள்; விவசாயிகளுக்கு எப்படி இது கேடான சட்டம்? - கொ.ம.தே.க. ஈஸ்வரன்

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

New agricultural laws; How is this bad law for farmers? - Easwaran

 

 

"மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகளின்  தற்கொலைகள் அதிகரிக்கும்." என கொங்கு நாடு தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் E.R.ஈஸ்வரன் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 


"விவசாய விளைபொருட்கள் மூலம் பெரிய வியாபாரிகள் பயனடைய வேண்டுமென்ற நோக்கத்தில் மூன்று விவசாய சட்டங்கள் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது. அந்த சட்டங்கள் இவைகள் தான், விளைவிப்பதற்கு உண்டான சட்டம். கொள்முதல் செய்வதற்கான சட்டம். கொள்முதல் செய்ததை இருப்பு வைப்பதற்கான சட்டம்.

 

இந்த மூன்று சட்டங்களும் இந்திய விவசாயிகளுடைய வருமானத்தை அதிகப்படுத்தி விவசாய குடும்பங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் என்று மத்திய அரசு  விளம்பரப்படுத்தி அதை நடைமுறைப்படுத்த முயற்சி நடக்கிறது.

 

உற்பத்தி சட்டம், இதுவரை குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் அமலில் இருந்தது. விவசாயிக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் குறைந்தபட்ச விலையில் அரசு கொள்முதல் செய்து கொள்ளும். சந்தையில் விலை அதிகம் இருந்தால் விவசாயி அங்கு விற்பனை செய்யலாம். விலை குறைந்தால் அரசு கொள்முதல் நிலையங்களில் கொடுத்துவிடலாம். அதனால் விவசாயிகள் வீழ்ச்சியை சந்திக்கமாட்டார்கள். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டுமென்று அரசு நினைத்திருந்தால் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படாத பொருட்களுக்கும் அதை நிர்ணயித்து விவசாயிகளின் நஷ்டத்தை தவிர்க்க நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கலாம். ஆனால் தற்போது தனியாரிடம் விவசாயிகள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு தனியார் நிர்ணயிக்கின்ற விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தனியார் பெரிய முதலாளிகள் ஒன்று சேர்ந்து கொண்டு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வார்கள். அவர்களுக்குள் எந்த காரணத்தைக் கொண்டும் போட்டி போட்டுக்கொண்டு விலை அதிகம் கொடுக்கமாட்டார்கள். சந்தையில் விலை அதிகமாக இருந்தாலும் ஒரு விவசாயி ஒப்பந்தம் போட்ட விலைக்குதான் விற்க வேண்டி வரும். இந்தியாவின் முழு சந்தையையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து சந்தை விலையை அவர்களுக்கு லாபம் வருகின்ற வகையில் நிர்ணயிப்பார்கள். இடைத்தரகர்களை ஒழிப்பதன் மூலமாக லாபம் வியாபாரிகளுக்கு சேருமே தவிர விவசாயிகளுக்கு சேராது.

 

சந்தைப்படுத்துதல் சட்டம், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்சென்று விற்கலாம் என்று சட்டத்தின் பலனாக அரசு சொல்கிறது. ஆனால் சிறு விவசாயிகளுக்கு அது சாத்தியமில்லை. பெரிய வியாபாரிகள் தான் சந்தைப்படுத்துதலை தங்கள் கட்டுக்குள் வைத்து ஓரிடத்தில் இருக்கின்ற பொருளை இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். தமிழ்நாட்டில் ஒரு பொருளின் விலை குறைவு என்றால் அதை குறைந்த விலைக்கு வாங்கி தேவைப்படுகின்ற விலை அதிகம் கிடைக்கின்ற மற்ற மாநிலங்களில் சென்று விற்கக்கூடிய வாய்ப்பு பெரிய வியாபாரிகளுக்கு தான் கிடைக்கும். ரிலையன்ஸ் போன்று இந்தியா முழுவதும் சில்லறை வியாபார கடைகள் வைத்திருக்கின்ற நிறுவனங்களுக்கு இது பலனளிக்கும்.

 

அத்தியாவசிய பொருட்கள் சட்டம், அத்தியாவசிய சட்டத்தில் பாதுகாப்பு கொடுக்கப்பட்ட பொருட்களை விவசாயிகளைத் தவிர வேறு யாரும் இருப்பு வைக்க முடியாது. ஆனால் புதிய சட்டத்தின்படி அனைத்து பொருட்களும் அத்தியவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படும்போது பணம் அதிகம் வைத்திருக்கின்ற பெரிய நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எந்த பொருளை வேண்டுமானாலும் இருப்பு வைத்துக் கொள்வார்கள். அதன் மூலம் எல்லா பொருட்களின் விலையும் பெரு நிறுவனங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். விவசாயிக்கு குறைந்த விலை கிடைக்கின்ற அதே நேரத்தில் நுகர்வோருக்கும் சந்தையில் அதிக விலைக்குதான் அந்தப் பொருட்கள் கிடைக்கும். இதன் மூலமாக பெருநிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டும்.

 

ஏற்கனவே பணமதிப்பு இழப்பு நடவடிக்கை போல, GST போல இந்த சட்ட திருத்தங்களும் மக்களுக்கு பயனளிப்பது போல அரசாங்கத்தால் சொல்லப்பட்டாலும் எதிர்வினையாற்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. விவசாய சட்டங்களில் மாறுதல் செய்வதற்கு முன்பாக அனைத்து மாநில அரசுகள் இடத்திலும், அந்தந்த மாநில விவசாயிகள் இடத்திலும் கருத்துகளை கேட்டு மத்திய அரசு ஆலோசித்து இருக்க வேண்டும். எப்போதும்போல அவசரகதியில் இந்த சட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசு முயற்சிப்பது பெருங்கேடாக முடியும்." என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தினால் மட்டும்தான் ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும்"- ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை! 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

"Only by stopping cotton exports can the textile sector be saved" - ER Eswaran MLA Request!

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் இன்று (16/05/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித் துறையை சார்ந்த அனைவரும் செய்வதறியாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தமிழகம் எதிர்கொண்டு இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு மேலாக, இதே சூழ்நிலை நீடிக்கின்ற நிலையிலும் ஒன்றிய அரசு இதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. 

 

உடனடியாக பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தினால் மட்டும்தான் ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும். பாதிப்பின் தீவிரத்தை உணராமல் ஒன்றிய அரசு அமைதி காப்பது வேதனையை அதிகப்படுத்துகிறது. குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெருமளவில் பஞ்சு பதுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் பயன்பாட்டுக்கு வராமல் நூல் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து பஞ்சு எடுக்கப்பட்டது தான் இந்த கொடுமைக்கு காரணமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மேலும் தங்களை தாங்களே நஷ்டப்படுத்தி கொண்டு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். 

 

தமிழக முதலமைச்சரும் தொடர்ந்து மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தொடர்ந்து கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். தொழில் துறையை சார்ந்தவர்கள் ஒன்றிய அமைச்சரை சந்தித்து முறையீடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுக்கு அப்புறமும் ஒன்றிய அரசு கண்டு கொள்வதாக இல்லை. தமிழகத்தினுடைய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழக ஜவுளி துறையின் உண்மை நிலையை ஒன்றிய அரசுக்கு எடுத்து செல்ல வேண்டும். இது இன்றியமையாத ஆக்கப்பூர்வமான தமிழகத்தின் தேவை. நூல் விலை விஷயத்தில் கருத்துக்களை கூறாமல் அமைதி காப்பதும் ஏற்புடையதல்ல. உடனடியாக உங்கள் முயற்சிகளை தொடங்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

“முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதை காட்டுகிறது” - ஈஸ்வரன்

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

It shows that the relationship between the Chief Minister and the Deputy Chief Minister is not smooth says Eeswaran

 

"வெறும் சம்பிரதாயத்திற்கு வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக இடைக்கால நிதிநிலை அறிக்கை இருக்கிறது" என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், "2011-ஆம் ஆண்டிலே 1 லட்சம் கோடியாக இருந்த தமிழக கடனை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக உயர்த்தி தமிழக மக்களைக் கடனாளிகளாக மாற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்த நிதிநிலை ஆண்டில் கடன் வாங்க தேவை இருக்காது என்று அறிவித்திருப்பது அமைய இருக்கின்ற புதிய ஆட்சியின் மீதுள்ள நம்பிக்கையா? 


தமிழகத்தின் வருமானம் 18 சதவீதம் குறையும் என்று அறிவித்துவிட்டு அரசினுடைய விளம்பரங்களுக்காக நூற்றுக்கணக்கான கோடியை தேர்தலை குறிவைத்துச் செலவு செய்திருப்பது ஏற்புடையதல்ல. பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்காக தமிழக அரசின் மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்படும் என்ற மக்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கி இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் மீதான வரி வருங்காலத்தில் உயரும் என்று சொல்லியிருப்பது வேதனையிலும் வேதனை.

 

காலாவதியாகப் போகிற அரசு போகிற போக்கில் 6,600 கோடியில் கோவையில் மெட்ரோ ரயில் என்று அறிவித்திருப்பது தேர்தலை குறிவைத்து நடத்தியிருக்கின்ற நாடகம். கவலையும் கஷ்டமும் வேதனையும் தவிர தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மிஞ்சி இருப்பது எதுவுமில்லை. பலவிதமான சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருந்த நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எதுவுமே இல்லாதது முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதைக் காட்டுகிறது. எதிர்பார்த்த சலுகை அறிவிப்புகள் எல்லாம் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பதற்காகக் காத்திருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.