Skip to main content

மூதாட்டியை நூதனமாக ஏமாற்றி ரூ.60,000 ஏ.டி.எம். மோசடி!

Published on 28/07/2020 | Edited on 28/07/2020

 

atm

 

 

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் வாழப்பட்டு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மனைவி ஞானசவுந்தரி (54). இவர் நேற்று மதியம் நெல்லிக்குப்பத்தில் உள்ள வங்கியில் அவருக்கு சொந்தமான தங்க நகைகளை ரூபாய் 60,000-க்கு அடகு வைத்துள்ளார். அடகு வைத்த அந்த தொகையை வங்கி நிர்வாகம் ஞானசவுந்தரியின் வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளது. 

 

அதையடுத்து ஞானசவுந்தரி வங்கியின் அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணத்தை எடுக்க சென்றுள்ளார். பணம் எடுக்க முயற்சி செய்தபோது பணம் வராததால் மீண்டும், மீண்டும் முயற்சி செய்யும்போது அருகில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், தான் பணம் எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம் கார்டின் சீக்ரெட் நம்பரை போடுமாறு கூறி அந்த நம்பரை தெரிந்து கொண்டார். பின்னர் “பணம் வரவில்லை என நீங்கள் வங்கி அதிகாரியிடம் சென்று கேளுங்கள்'' என்று கூறி, தான் கையில் வைத்திருந்த ஏ.டி.எம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு சென்றுள்ளார். 

 

இதையடுத்து ஞானசவுந்தரி வங்கி அதிகாரிகளிடம் சென்று, ‘நீங்கள் செலுத்திய ரூபாய் 60,000 பணத்தை எடுக்க முடியவில்லை' என புகார் தெரிவித்தார். அதிகாரிகள் அவரது செல்போனை வாங்கி அதில் இருந்த குறுஞ்செய்திகளை ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது ரூபாய் 10,000, 10,000 என பணம் எடுத்ததாக நான்கு முறை குறுஞ்செய்தி வந்ததை அறிந்த வங்கி அதிகாரிகள் ஞானசவுந்தரியின் ஏ.டி.எம். சீக்ரெட் நம்பர் கேட்டு, வங்கி கணக்கிலிருந்து ஏ.டி.எம் கார்டு இணைப்பினை துண்டித்தனர். 

 

வங்கி அதிகாரிகள் கணக்கை துண்டித்தால் மீதமுள்ள பணத்தை மர்ம நபரால் எடுக்கமுடியவில்லை. பின்னர் ஏ.டி.எம். கார்டை ஆய்வு செய்ததில் அந்த கார்டு கௌரி என்ற பெயரில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஞானசவுந்தரி நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

 

அதையடுத்து அந்த புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் ஏ.டி.எம். இயந்திரம் உள்ள அறையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் அந்த மர்ம நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் எனவும் சி.சி.டி.வி. கேமரா வீடியோ காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.