Skip to main content

மறைந்த மோப்ப நாய் 'பிராவோ'! - 30 குண்டுகள் முழங்க நல்லடக்கம்!

Published on 15/04/2021 | Edited on 15/04/2021

 


காவல்துறையில் குற்றச் சம்பவங்கள் தொடர்பாகப் புலனாய்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புகளுக்கென்று காவலர்கள் உள்ளனர். இது தவிர்த்து மனிதனின் எண்ணத்திற்கு எட்டாத குற்றச் சம்பவங்களை நுண்ணிய மோப்ப சக்தியாலும், பேரழிவை ஏற்படுத்துகிற வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பதற்கும் மோப்ப நாய்களின் பிரிவு இருக்கின்றன. கூர்மையான பயிற்சிக்குப் பின்னரே இந்த மோப்ப நாய்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. குறிப்பாக தன் பாதுகாவலர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதை தரும் சல்யூட் அடிக்கும் அளவுக்கு மோப்ப நாய்களுக்குப் பயிற்சியளித்திருப்பது திறமையின் உச்சம்.

 

இதில் தீவிரமாகச் செயல்பட்டது நெல்லை மாநகரின் வெடிகுண்டு தடுப்புப் பிரிவிலுள்ள 'பிராவோ' எனும் நாய். ஐந்தறிவுப் பிராணி என்றாலும் அதன் நுண்ணிய திறமை ஐந்தறிவையும் தாண்டியது. வெடிகுண்டு வழக்குகள் குற்றச் சம்பவங்களில் தன்னுடைய மோப்ப சக்தியால் பல குற்றச் சம்பவங்களின் புலனாய்வுக்குப் பெரிதும் உதவியிருக்கிறது பிராவோ என்கிறார்கள் அப்பகுதி காவல்துறையினர்.

 

அப்படிப்பட்ட மோப்பத் திறன் கொண்ட ஏழரை வயதுடைய பிராவோ நேற்றிரவு வயது மூப்பு காரணமாக மரணமடைந்தது. போலீஸில் பணியாற்றினாலும், அதுவும் சக உயிர்தானே; வாயில்லா ஜீவன் போன்று பார்க்கவில்லை. எங்களின் அங்கம் தான் பிராவோ. அதை எங்களின் தோழனாகவே பாவித்து வந்தோம். பிரித்துப் பார்க்கவில்லை எனக் கண்கள் கசியச் சொல்கிறார்கள், பிராவோவைப் பராமரிக்கிற வெடி குண்டுத் தடுப்புப் பிரிவு காவலர்கள்.

 

பிராவோ இறந்ததும் உரிய சடங்குகளுடன் பால் ஊற்றி அடக்கம் செய்தனர் காவலர்கள். பிராவோவின் நல்லடக்கம் முறைப்படி போலீஸ் மரியாதையோடு காவலர்களின் 30 குண்டுகள் முழங்க மாநகர போலீஸ் துணை ஆணையர்களான மகேஷ்குமார் மற்றும் சீனிவாசன், காவலர்கள் ஆகியர்களின் மலரஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. காவல் துறையினரின் இந்த மனித நேயம் காண்பவர்களின் கண்களை ஈரமாக்கின.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.