Skip to main content

நெல்லை கருப்பசாமி பாண்டியன் அதிமுகவில் இணைந்தார் 

Published on 05/01/2020 | Edited on 06/01/2020

நெல்லை மாவட்டத்தின் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் கலைஞரால் மாவட்ட பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். கட்சியில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக கலைஞரால் கருப்பசாமி பாண்டியன் நீக்கப்பட்டார். அதன்பின் கடந்த இரண்டு வருடமாக கருப்பசாமி பாண்டியன் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். 

கட்சி தொடர்பில்லாமல் ஒதுங்கியிருந்த அவர் அதிமுகவில் சேருவதற்காக பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு வந்த நிலையில் அதேசமயம் சசிகலா இருந்தபோது சசிகலா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதன் பின் ஏற்பட்ட பிணக்கு காரணமாக மறுபடியும் அரசியலை விட்டு ஒதுங்கியபடியே இருந்த கருப்பசாமி பாண்டியன் திமுக தலைவர்களை  தொடர்பு கொண்டு திமுகவின் சேரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

 

admk

 

அந்த சமயத்தில் கலைஞர் மருத்துவமனையில் இருந்த நிலையில், கருப்பசாமி பாண்டியன் திமுகவில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்தன. ஆனால் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் மருத்துவமனையில் இருந்ததால் இந்த இணைப்பு தள்ளிவைக்கப்பட்டது. கலைஞர் மறைந்த பிறகு கருப்பசாமி பாண்டியனை திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் திமுகவில் இணைந்தார்.

அவருக்கு சில பொறுப்புகள் வழங்கபடாமல் இருந்த நிலையில், அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின் நாங்குநேரி இடைத்தேர்தலில் சில பொறுப்புகள் தரப்பட்டன. அந்த பணிகளையும் சிறப்பாக திறம்பட செய்திருந்தார் கருப்பசாமிபாண்டியன்.

 

admk


இதனிடையே தனக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என ஆதங்கத்தில் இருந்த கருப்பசாமி பாண்டியன் பலமுறை கோரிக்கை வைத்தும் கவனிக்கப்படாமல் இருந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதால் என்னை பயன்படுத்திக்கொண்டு கொண்டதாக விரக்தியில் இருந்தார். இதனைப் பயன்படுத்திக்கொண்டு அதிமுகவினர் குறிப்பாக  நெல்லையைச் சேர்ந்த சுதா பரமசிவம், அம்பை எம்எல்ஏவான முருகையா பாண்டியன் ஆகியோர் அவரை சந்தித்து அதிமுகவில் சேரும்படி அழைப்பு விடுத்திருந்தனர்.

இது தொடர்பாக அதிமுக தலைமைக்கும் தகவல் தெரிவித்த நிலையில் கருப்பசாமி பாண்டியன் அதிமுகவில் இணையப் போவதாக நெல்லையில் தகவல் கசிந்தது. இந்நிலையில் இன்று மாலை சென்னை சென்ற கருப்பசாமி பாண்டியன் கட்சியின் பொறுப்பாளரான ஓபிஎஸ்ஸின் தலைமையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.