Skip to main content

உறியடி பகையால் நிகழ்ந்த கொலை; உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

nellai incident ;Relatives refuse to buy the body

 

சீரியல் கொலைகளால் பதற்றத்திலிருக்கிறது தென் மாவட்டங்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாளையின் சீவலப்பேரி படுகொலை பதற்றம் ஒரு வாரமாக நீடித்துத் தணிந்த பின்பு நேற்றைய தினம் நெல்லையின் பேட்டைப் பகுதியில் நடந்த கொலை மீண்டும் கொதிப்பைக் கீறியுள்ளது.

 

நெல்லையிலுள்ள சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூரைச் சேர்ந்தவர் நம்பிராஜன். பேட்டையிலுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள். 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்திருக்கிறது. தற்போது அவர் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

 

நேற்று முன்தினம் இரவு நம்பிராஜன் வழக்கம்போல் தனது நிறுவனத்திற்கு வேலைக்கு பைக்கில் சென்றிருக்கிறார். அவரை வேவு பார்த்து 2 பைக்குகளில் பின்தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று நம்பிராஜனை சுற்றி வளைத்தவர்கள் சரமாரியாக கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த நெல்லை மாநகர துணை ஆணையர் சரவணக் குமார் தலைமையிலான போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நம்பிராஜனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க, அங்கு அவர் மரணமடைந்திருக்கிறார்.

 

nellai incident ;Relatives refuse to buy the body

 

இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நடுக்கல்லூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது உறியடி நிகழ்ச்சியை ஒரு தரப்பினர் வெகு விமரிசையாகக் கொண்டாடியிருக்கின்றனர். அது மற்றொரு தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த அது சமயம் ஒரு வாலிபரை மற்றொரு தரப்பினர் தாக்கியுள்ளனர். அந்த வாலிபர் விழா நடத்தும் இளைஞர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து நம்பிராஜன் உள்ளிட்ட இளைஞர்கள் மற்றொரு தரப்பினரின் பகுதிக்குள் சென்று தட்டிக் கேட்டுள்ளனர். இதன் காரணமாகவே இரு தரப்பினருக்குமிடையே பகைமை வளர்ந்திருக்கிறது. இந்தப் பகைமை முன்விரோதம் காரணமாக நம்பிராஜனை வேவு பார்த்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது என்கின்றனர் காவல்துறை தரப்பினர்.

 

இந்தக் கொலைச் சம்பவம் நடுக்கல்லூர், சுத்தமல்லி பகுதிகளைப் பதற்றமாக்க, பாதிக்கப்பட்ட தரப்பினர் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணைச் செயலாளரான கல்லூர் வேலாயுதம் தலைமையில் நடுக்கல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் நீடிக்கவே அவர்களிடம் போலீசார் மற்றும் கோட்டாட்சியர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், உண்மைக் குற்றவாளிகளையும் தூண்டுதலாக இருந்தவர்களையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். நம்பிராஜனின் மனைவிக்கு நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும். கோரிக்கை நிறைவேறும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றனர். போலீசாரின் உறுதிமொழியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட, சம்பவம் தொடர்பாக பாலசுந்தர், சிவமணி, ஆதி வேலாயுத பெருமாள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.