Skip to main content

பதறவைக்கும் “இரட்டைக்” கொலை...  வயது மீறிய முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த கொடூரம் 

Published on 16/02/2020 | Edited on 16/02/2020

தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகரில் உள்ளது புங்கவர் நத்தம் கிராமம். சுமார் 30 வீடுகளைக் கொண்ட சிறிய கிராமம். அங்கே வசிப்பவர் சண்முகம் (58) அவரது மனைவி மாரியம்மாள் (45) தம்பதியர். கூலி வேலைச் செய்து வரும் சண்முகம் ஏற்கனவே திருமணமானவர். முதல் மனைவியைப் பிடிக்கததால் அவரை ஒதுக்கிவிட்டு இரண்டாம் தாரமாக மாரியம்மாளைத் திருமணம் செய்திருக்கிறார். மாரியம்மாளும் அங்குள்ள பள்ளியில் துப்புரவுவேலைகளைச் செய்துவிட்டு கிடைக்கும் கூலி வேலையையும் பார்த்திருந்திருக்கிறார். அவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன். இவர்களில் இரண்டு மகள்களும் திருமணமாகி வெளியூரில் செட்டிலாகிவிட, கடைசி மகன் நர்சிங் படித்துவிட்டு அது தொடர்பான வேலையிலிருக்கிறார்.

 

INCIDENT IN NELLAI... POLICE INVESTIGATION


இந்த மாரியம்மாள் வீட்டின் எதிர்வீட்டில் குடியிருப்பவர் சித்திரை வேலுவின் மகன் ராமமூர்த்தி. 28 வயதேயானாலும் திருமணமாகாதவர். கட்டுமானப் பணியின் கொத்தனார் வேலைக்குப் போய் வருபவர். இதனிடையே சூழல் காரணமாக மாரியம்மாளுக்கும் அவளைவிட வயது குறைந்த ராமமூர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டு அது அவர்களை நெருக்கமாக்கியுள்ளது. அந்த உறவு அவர்களைப் படுக்கையறைவரை கொண்டு போயுள்ளது. கணவர் இல்லாத நேரம் பார்த்து மாரியம்மாள் தகவல் தர, அவரது வீட்டிலேயே இருவரும், ஒன்றாக இணைந்திருக்கிறார்கள். இந்தக் முறையற்ற தொடர்பு கணவர் சண்முகத்திற்குத் தெரியவர, அவர் பல தடவை மனைவி மாரியம்மாளைக் கண்டித்திருக்கிறார். திருந்தவில்லையாம்.

 

INCIDENT IN NELLAI... POLICE INVESTIGATION

 

வேலி தாண்டிய ஆடு, தொடர்ந்து வெளியே மேய்வதைப் போன்ற நிலையானது. ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களின் கூத்தைச் சண்முகம் நேரில் பார்த்துக் கொதித்துமிருக்கிறாராம். இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த சண்முகம் சம்பவ நாளான நேற்று, தான், வெளியூருக்கு வேலையின் பொருட்டுச் செல்வதாக மாரியம்மாளிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். கணவரின் திட்டமறியாத மாரியம்மாள் தன் ராமமூர்த்தியை வரச்சொல்ல, இருவரும் ஜாலியாக இருந்திருக்கிறார்கள். பின்னர் ஒரே பாயிலேயே இருவரும் ஒன்றாகத் தூங்கியுள்ளனர். திட்டப்படி நடு இரவு 2 மணியளவில் வீட்டிற்கு வந்த சண்முகம், ஒரே பாயில் மனைவி மாரியம்மாளும், ராமமூர்த்தியும் அயர்ந்து தூங்குவதைக் கண்டு ஆத்திரம் அளவு கடந்திருக்கிறது. அரிவாளால் ராமமூர்த்தியின் தலையில் தாக்க உறக்கத்திலேயே இருவரையும் மாறி மாறி வெட்டித்தள்ளியிருக்கிறார் சண்முகம். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மாரியம்மாள், ராமமூர்த்தி இருவரும் சம்பவ இடத்திலேயே சடலமானார்கள்.

 

INCIDENT IN NELLAI... POLICE INVESTIGATION

 

சண்முகம் இன்று விடிந்த காலைப் பொழுதிலேயே பசுவந்தனைக் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு வந்த பசுவந்தனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிமொழி இருவரது உடல்களையும் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

வயது மீறியமுறையற்ற தொடர்பு இரட்டைப் படுகொலை, தூத்துக்குடி மாவட்டத்தைப் பரபரப்பாக்கியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.