Skip to main content

       கூல்டிரிங்ஸ் என்று  7 up பாட்டிலில் இருந்த மண்ணெண்ணை குடித்த குழந்தை பலி

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

 

நெல்லை மாவட்டத்தின் சேரன்மகாதேவி நகரைச் சேர்ந்த மைதீன் பிச்சையின் மகள் ஷகிலா பானு (25). இவருக்கும் அந்தப் பகுதியிலுள்ள சம்பன்குளத்தில் வசிக்கும் முஸ்தபா (30) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆஷிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

 

a

 

இதனிடையே ஷகிலா பானுவிற்கு கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதன் காரணமாக அவர் சேரன்மகாதேவியிலிருக்கும் தன் தாய் வீட்டில் தங்கியிருக்கிறார். மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் 7up குளிர்பான பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையை ஒன்றரை வயது குழந்தை ஆஷிகா தவறுதலாக குளிர்பானம் என்று நினைத்து குடித்துள்ளார்.

 

குடித்த மண்ணெண்ணை மூக்குவழியாகவும் சென்றிருக்கிறது என்று சொல்லப் படுகிறது. இதனால் மயக்கமடைந்த குழந்தையை உறவினர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காததால் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தையின் உயிர் பிரிந்தது.

இது குறித்து சேரன்மகாதேவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

ஆபத்தானவைகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும் என்கிற விழிப்புணர்வு பிரச்சாரமும் ஒரு புறம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

Next Story

மது போதையில் ரகளை; தட்டிக் கேட்டவர் கொலை; சுட்டுப் பிடித்த போலீசார்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Intoxicated with alcohol; Police shot

சிறையில் இருந்து வந்த இளைஞர் மது போதையில் சாலை பணியாளரை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு காவலரையும் வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் வெள்ளங்குளி பகுதியை சேர்ந்த பேச்சிதுரை என்ற நபர் வழக்கு ஒன்றில் சிக்கி கடந்த வாரம் பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளிவந்த நிலையில், தன்னுடைய நண்பர் சந்துரு என்பவருடன் சேர்ந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் இருந்த இருவரும் சாலையில் காரை நிறுத்தி ரகளை செய்து கொண்டிருந்தனர். அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த சாலை பணியாளர் கருப்புசாமி என்பவர் இதனைத் தட்டிக் கேட்டுள்ளார்.

போதையில் ஆத்திரமடைந்த பேச்சிதுரை சாலைப் பணியாளர் கருப்பசாமியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். அதன் பிறகு அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த தலைமைக் காவலர் செந்தில்குமார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, அவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அருகிலிருந்த வாழை தோப்புக்குள்  பேச்சிதுரை தலைமறைவானான்.

Intoxicated with alcohol; Police shot

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த உடனடியாக காவல்துறையினர் பலர் அந்த பகுதியில் முகாமிட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையை அடுத்து வாழை மர தோப்பில் பதுங்கி இருந்த பேச்சிதுரையை போலீசார் சுட்டுப் பிடித்தனர். அதன் பிறகு அவனுடன் சேர்ந்து ரகளையில் ஈடுபட்ட சந்துருவையும் போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.