Skip to main content

பேட்டை தொழிற்பேட்டை அவலங்கள்! 

Published on 19/06/2021 | Edited on 19/06/2021

 

    
 

nellai district industry peoples tn govt


    
திருநெல்வேலி பேட்டை உருவாக்கப்பட்டதற்கே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான். டான்சி என்ற பெயரே தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் என்பதாகும். சிறுதொழில் வளர்ச்சி கழகம், சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், தொழில் முதலீட்டு மையம், சிறுதொழில் சேவை நிறுவனம், மாநில தொழில் மேம்பாட்டு கழகம், சிறு தொழில் வர்த்தக கூட்டமைப்பு, தொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை கழகம், சிறு, மற்றும் குறு தொழில் வளர்ச்சிக் கழகம் என்று பல பெயரிட்டு குறு மற்றும் சிறு தொழில்களை ஊக்குவிப்பதாக சொன்னார்கள். 

 

நாட்டின் தொழில் வளர்ச்சி பெருக வேண்டும் என்பதற்காக 1958- ஆம் ஆண்டு அன்றைய சென்னை ராஜ்யத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு அமைக்கப்பட்ட தொழிற்பேட்டைகளில் மிக முக்கியமான இடத்தை பெற்றிருந்தது திருநெல்வேலி பேட்டை பகுதியிலுள்ள தொழிற்பேட்டை.

 

64 சிறு தொழில்களை மேம்பாடு செய்வதற்காக 668. 61 கோடி ரூபாயில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSI) உருவாக்கப்பட்டது. இக்கழகத்தின் நோக்கம் பயிற்சி கொடுப்பது, பொருள்களை செயல்முறைப் படுத்துவது, 'அரசு ' என்று முத்திரை இட்டு விற்பனை செய்வது.

 

வேளாண்மை உற்பத்தி கருவிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான தொழிற்சாலைகளும் இப்பேட்டையில் உருவாக்கப்பட்டன. தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் தொழில் வளர்ச்சியை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட பேட்டை இன்றைக்கு அவலத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.

 

சிறு குறு தொழில்களை ஊக்குவிக்கிறோம். அதற்காக நாட்டின் பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறோம் என்பவர்கள் திருநெல்வேலி பேட்டையின் அவலத்தை நேரில் பார்க்க வேண்டும். படித்தோ, படிக்காமலோ வேலை செய்வதற்கு தயார் என்று சொல்லி பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இன்றைக்கு இருக்கின்றார்கள். இந்தியாவிலேயே மிகப் பிரதானமான வளர்ச்சிக்கு காரணியாக இருப்பவை சிறு குறு நடுத்தரத் தொழில்கள்.

 

தேசிய உற்பத்தியில் 8 சதவீதமும் மாநில உற்பத்தியில் 45 சதவீதமும் இத்தகைய தொழில்களே நிரப்புகின்றன. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரக்கூடியது சிறு குறு தொழில்கள்.

 

தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்கள் உருவாக காரணம் வேலையின்மையை போக்காததே என்று ரத்னவேல் பாண்டியன் விசாரணை கமிஷன் சொல்லி தொழில் வளர்ச்சிக்கு திட்டமிட வேண்டும் என்று வழிகாட்டியது.

 

தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என்பதை விட இருக்கும் தொழில்களும் மூடப்பட்டு இருப்பது வேதனைக்குரிய அடித்தளமாக இருக்கின்றது.

 

இங்கு உள்ள அலுவலகம் திறக்கப்படுவது அபூர்வமான ஒரு காட்சியாகும். வேளாண்மை உற்பத்திக் கருவிகளை தயாரிக்கும் ஆலையும் மூடப்பட்டிருக்கிறது. மாநில அரசுக்குச் சொந்தமான டான்சி நிரந்தரமாக மூடப்பட்டு இருக்கின்றது.

 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மூடியிருக்கும் தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் இயக்குவதுடன், மூடப்பட்டிருக்கும் டான்சி மற்றும் வேளாண்மை இயந்திர உற்பத்தி ஆலைகளை இயக்க வேண்டும். அல்லது இளம் தொழில் முனைவோரிடம் இவற்றை கொடுத்து இயக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

 

இவைகளை இயக்குவதன் மூலமாக 10 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறக்கூடிய நிலைமை ஏற்படும். தமிழக அரசு இதனை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் பொதுமக்கள்.  

 

- காசி விஸ்வநாதன்

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

Next Story

மது போதையில் ரகளை; தட்டிக் கேட்டவர் கொலை; சுட்டுப் பிடித்த போலீசார்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Intoxicated with alcohol; Police shot

சிறையில் இருந்து வந்த இளைஞர் மது போதையில் சாலை பணியாளரை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு காவலரையும் வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் வெள்ளங்குளி பகுதியை சேர்ந்த பேச்சிதுரை என்ற நபர் வழக்கு ஒன்றில் சிக்கி கடந்த வாரம் பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளிவந்த நிலையில், தன்னுடைய நண்பர் சந்துரு என்பவருடன் சேர்ந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் இருந்த இருவரும் சாலையில் காரை நிறுத்தி ரகளை செய்து கொண்டிருந்தனர். அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த சாலை பணியாளர் கருப்புசாமி என்பவர் இதனைத் தட்டிக் கேட்டுள்ளார்.

போதையில் ஆத்திரமடைந்த பேச்சிதுரை சாலைப் பணியாளர் கருப்பசாமியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். அதன் பிறகு அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த தலைமைக் காவலர் செந்தில்குமார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, அவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அருகிலிருந்த வாழை தோப்புக்குள்  பேச்சிதுரை தலைமறைவானான்.

Intoxicated with alcohol; Police shot

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த உடனடியாக காவல்துறையினர் பலர் அந்த பகுதியில் முகாமிட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையை அடுத்து வாழை மர தோப்பில் பதுங்கி இருந்த பேச்சிதுரையை போலீசார் சுட்டுப் பிடித்தனர். அதன் பிறகு அவனுடன் சேர்ந்து ரகளையில் ஈடுபட்ட சந்துருவையும் போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.