Skip to main content

மீண்டும் ஒரு மாணவியின் உயிரைப் பறித்த நீட்!

Published on 26/12/2021 | Edited on 26/12/2021

 

Need to take the life of a student again!

 

நீட் தேர்வு ஏராளமான மாணவ, மாணவாகளின் உயிரை பறித்துக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியானாலே பல பெற்றோர்கள் பதற்றமடைந்துவிடுகின்றனர். நீட் வேண்டாம் என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். ஆனாலும் எந்தப் பலனும் இல்லை. இந்த நிலையில் தான் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் நடந்துள்ளது.

 

பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி வெள்ளைச்சாமி- நாகூர் மாலா தம்பதியின் மகள் துளசி. பேராவூரணியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து 10- ஆம் வகுப்பில் 455 மதிப்பெண் பெற்ற துளசி, பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் +2 படித்து 421 மதிப்பெண் பெற்றார். 

 

தனது மருத்துவர் கனவை நனவாக்க திருச்சியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பணம் கட்டி நீட் பயிற்சி பெற்றவர் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால் தனக்கு மருத்துவர் சீட் கிடைக்காது என்ற நிலையில் வேறு படிப்பிற்காக முயற்சி செய்த போது தனது சானறிதழ்களை வாங்கி வைத்திருந்த தனியார் பயிற்சி மையம் பயிற்சிக் கட்டணம் பாக்கி உள்ளதாகக் கூறி சான்றிதழைக் கொடுக்க மறுத்த நிலையில் சனிக்கிழமை மதியம் பெற்றோர்கள் வெளியே சென்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மாணவி துளசி.

 

தகவல் அறிந்து பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், போலீசாரும் சென்றனர். முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல் கூறிச் சென்றார்.

 

இனியும் இப்படி குழந்தைகளை இழக்கக் கூடாது என்று பெற்றோர்கள் வலியுறுத்தி கதறுகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.