Skip to main content

இயற்கை உரத்திற்காக ஆடுகளை கிடை மடக்கும் விவசாயிகள்...

Published on 01/07/2020 | Edited on 01/07/2020
cccc


கடலூர் மாவட்டம்: மங்களூர், சிறுபாக்கம், அடரி, பனையாந்தூர், வள்ளி மதுரம், பாசார், காஞ்சிராங்குளம், ரெட்டா குறிச்சி, வேப்பூர், கழுதூர், ஆவட்டி கல்லூர், பொடையூர் உட்பட கடலூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பெருமளவில் மானாவாரி நிலங்களையே வைத்துள்ளனர்.

அதில் ஆடி மாதத்திற்கு முன்பு நிலத்தை உழுது பண்படுத்தி ஆடி மாதம் பெய்யும் மழையை பயன்படுத்தி பருத்தி, மக்காச்சோளம், கடலை, துவரை ஆகிய பயிர்களை பெருமளவு சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த நிலங்களில் மழைக் காலத்திற்கு முன்பே ஜூன், ஜூலை மாதங்களில் தென்மாவட்டங்களில் இருந்து மேய்ச்சலுக்கு வரும் செம்மறி ஆடுகள் பல ஆயிரக்கணக்கில் கொண்டு வருவார்கள். அந்த ஆடுகளை மேற்படி கிராமங்களில் வாழும் விவசாயிகள் தங்களின் நிலத்தில் இயற்கை விவசாயத்திற்காக இரவு நேரங்களில் ஆடுகளை கிடைக்கட்டும் வழக்கம் இருந்து வருகிறது.

ஒரு இரவுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கொடுத்து ஆடுகளை கிடைமடக்க வைப்பார்கள். இதற்கு ஆட்டுக்கிடை என்று கூறுவதுண்டு. இரவு முழுதும் ஆடுகளின் கழிவுகள் நிலங்களில் விழும் அதை உழவு செய்து தானியங்களை விதைத்தால் அமோக விளைச்சல் கிடைக்கும் என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள். மேலும் ரசாயன உரங்கள் பயன்படுத்துவது குறைந்து வருகிறது, அதன்மூலம் உற்பத்தி செய்யப்படும்  தானியங்கள்  மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் இதேபோன்று ஆடு, மாடுகளை தங்கள் நிலத்தில்  கிடைக்கட்டி, அதன்மூலம்  இயற்கை விவசாயம் செய்து அந்த தானியங்களை உற்பத்தி செய்வதில் ஆர்வமாக உள்ளனர் இப்பகுதி விவசாயிகள். உடலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் விளைபொருட்களை நிலத்திலிருந்து விளைய வைக்கவேண்டும் என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.