Skip to main content

தேசிய அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டி; தமிழக மாணவி முதலிடம் 

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

national level speech competition tamil Nadu student first place

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர் மாணவி ஆயிஷா ருக்சானா. இவர் கீழக்கரை தாசிபி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சைபர் செக்யூரிட்டி சிஸ்டம் படித்து வருகிறார். முதலில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் முதலிடம் வகித்தார். பின்பு மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து சமீபத்தில் டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவரைப் பாராட்டும் விதமாக கீழக்கரை ‘நம்ம தெரு நட்பு’ சார்பாக இளம் சாதனையாளர் விருது வழங்கி அவரை கௌரவித்தனர்.

 

மேலும் இது பற்றி மாணவி ஆயிஷா ருக்சானா கூறியதாவது, "தமிழ்நாடு, பாண்டிச்சேரி சார்பாக தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவி நான் மட்டுமே. அதிலும் கீழக்கரை பகுதியிலிருந்து டெல்லி வரை செல்வது என்பது, வீட்டில் உள்ளவர்களிடம் கூறி அவர்களிடம் இருந்து அனுமதி வாங்குவது என்பது பெரிய விஷயமாக இருந்தது.  இருந்த போதும் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் என்னுடைய சூழ்நிலையை புரிந்துகொண்டு மிகவும் உதவிகரமாக செயல்பட்டு அவர்களும் என்னுடன் டெல்லிக்கு வந்தார்கள். அதற்கு முன்பாக இது சம்பந்தமாக நான் ஹிஜாப் அணிந்துதான் வருவேன். அங்கு உள்ள அதிகாரிகள் அதற்கு ஏதாவது சொன்னால் நான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டேன் என உறுதியாக இருந்தேன். அதற்கு அங்குள்ள அதிகாரிகள், ‘எந்த பிரச்சனையும் வராது வாருங்கள்' என்றனர்.

 

national level speech competition tamil Nadu student first place

அதேபோல் டெல்லி சென்றபோது ஆங்கிலம் தெரிந்த அதிகாரிகள் இருந்தாலும் அவர்கள் ஹிந்தியை பேசுவதில்தான் ஆர்வம் காட்டினார்கள். நானும் ஓரளவு இந்தியில் பேசி சமாளித்தேன். பிரதமருடன் பேசும்போது ஆங்கிலத்தில் பேசினேன். இப்பொழுது இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டது எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. நான் இவ்வளவு தூரம் சென்றதற்கு என்னுடைய குடும்பத்தினர் தான் காரணம். இதற்கு முன்பாக லண்டன் பார்லிமென்ட்டில் பேசுவதற்கு வாய்ப்பு வந்தது. ஆனால் என்னால் அங்கு செல்ல முடியவில்லை" என்றார் வருத்தத்துடன். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவிற்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Arvind Kejriwal, Kavita extended court custody

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங், சன்பிரீத் சிங் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், அம்மாநில சட்டமேலவை உறுப்பினருமான கவிதாவின் இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர் திகார் சிறையில் இருந்து வருகிறார்.

இதற்கிடையே ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சஞ்சய் சிங் ஜாமீனில் இருந்து வருகிறார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா, சன்பிரீத் சிங் ஆகியோர் திகார் சிறையில் இருந்து காணொளி மூலம் இன்று (23.04.2024) டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து மூவரின் நீதிமன்ற காவலையும் மே 7 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Arvind Kejriwal, Kavita extended court custody

முன்னதாக திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது. உடலில் சர்க்கரை அளவு கூடியதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்படி குறைந்த அளவு இன்சுலின் மருந்துகள் இரண்டு யூனிட்கள் வழங்கப்பட்டது என திகார் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.