Skip to main content

"என் தங்கையாவது நல்லா இருக்கட்டும்" - தற்கொலை செய்து கொண்ட +2 மாணவர்

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

national level exam incident involved in school student 

 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள கோவர்தனகிரி செல்வா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவியும், 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இவரது மகன் 12 ஆம் வகுப்பும், மகள் 9 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விஜயனும், அவரது மனைவியும் பொங்கல் பண்டிகைக்கு புத்தாடைகளை வாங்குவதற்கு கடைக்குச் சென்றுள்ளனர். வீட்டில் அவரது மகனும், மகளும் தனியாக இருந்துள்ளனர்.

 

படுக்கை அறையின் உள்ளே சென்ற அண்ணன்  நீண்ட நேரம் ஆகியும் கதவைத் திறக்காததால், தங்கை ஜன்னல் வழியாகச் சென்று பார்த்தபோது தனது அண்ணன் தூக்கில் தொங்குவதைக் கண்டு கதறி அழுதுள்ளார். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மாணவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனை செய்ததில் மாணவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவன் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், "நீங்கள் விரும்பிய படிப்பை படிக்க எனக்கு விருப்பம் இல்லை. என் விருப்பத்திற்கு நீங்கள் வாழவிடவில்லை. 30 வயதுக்கு மேல் திருமணமாகி வேலைக்கு போன பிறகுதான் நான் ஜாலியாக இருக்க முடியுமா? நான் உயிரோடு இருந்து என்ன பண்ணப்போறேன். என் தங்கையாவது நல்லா இருக்கட்டும்" என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாணவர் ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்ததும், இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.  இதுகுறித்து போலீசார் மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக ரோட் ஷோவில் விதிமீறல்; கோவையில் எழுந்த சர்ச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Violation at BJP road show; Controversy in Coimbatore

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோயம்புத்தூர் வந்திருந்த பிரதமர் மோடி ரோட் ஷோவில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நடைபெற கலந்துகொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தற்பொழுது கூட்டணியில் இணைந்திருக்கும் பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குற்றச்சாட்டுக்கு காரணமாகியது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Next Story

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்; பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Tragedy happened to the school student for Head-on collision vehicles

திருச்சி, மாவட்டம் சோமரசம்பேட்டை போசம்பட்டி அருகேயுள்ள நரியன்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கிஷோர் (14). இவர் கரூர் மாவட்டம், ஆர்.டி.மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி இரவு, கிஷோர் தனது வீட்டிலிருந்து வியாழன்மேட்டில் உள்ள மளிகை கடைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். 

அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனமும், கிஷோர் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில், படுகாயமடைந்த கிஷோர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், பள்ளி மாணவன் கிஷோரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்த விபத்தில், கிஷோர் வாகனம் மீது மோதிய, எட்டரை நடராஜபுரத்தை சேர்ந்த தர்மராஜ் (40) மற்றும் அவருடன் வாகனத்தில் அமர்ந்து வந்த கிருஷ்ணராஜன் ஆகிய இருவரும் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த சோமரசம்பேட்டை காவல்துறையினர், இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 9ஆம் வகுப்பு மாணவன், விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.