Skip to main content

கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறை... நீதிமன்றத்தின் பேனர் உத்தரவு காற்றில் பறந்துவிட்டதா... பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

Narendra modi birthday celebration in tamilnadu by L.Murugan


பிரதமர் மோடியின் 70 -ஆவது பிறந்தநாளான இன்று (17/09/2020) அவருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி மோடியின் 70 -ஆவது பிறந்தநாள் இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க சார்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் சென்னையில் இன்று மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக பா.ஜ.கவின் மாநிலம், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சென்னையில் இந்த விழாவின்போது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


சென்னையின் முக்கிய சாலைகளில் தமிழக பா.ஜ.கவின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. காலை, சென்னை மதுரவாயில் மேம்பாலம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட 70 அடி உயர கொடிக் கம்பத்தில் எல்.முருகன் பா.ஜ.க கொடியை ஏற்றினார். பின் பாண்டிபஜாரில் பா.ஜ.கவின் கலை இலக்கிய அணி சார்பில் மோடியின் சாதனைகள் டிஜிட்டலில் திரையிடப்பட்டது. அங்கிருந்து சாரட்டு வண்டியில் யாத்திரை சென்றார். இதில் பா.ஜ.கவின் தொண்டர்கள் உயர்மட்ட நிர்வாகிகள் பலர் பாடல், நடனம் என உற்சாகமாக இருந்தனர். பின் 70 அடி நீள கேக் வெட்டப்பட்டது. 

 

Narendra modi birthday celebration in tamilnadu by L.Murugan

 

2019 -ஆம் ஆண்டு சென்னை பள்ளிக்கரனையில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சலர் மகன் திருமணத்திற்காக பேனர் வைக்கப்பட்டது. அந்த போனர் விழுந்து ஐ.டி ஊழியர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியின்றி பேனர்களை வைக்கக்கூடாது என்றும் மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்தது. ஆனால், இன்று சென்னையில் இருந்த பா.ஜ.கவினரின் பேனர்கள் அனுமதியுடன்தான் வைக்கப்பட்டதா எனக் கேள்வி எழுந்துள்ளது.

 

Narendra modi birthday celebration in tamilnadu by L.Murugan

 

தமிழகத்தில் கரோனா தொற்று தினமும் சராசரியாக 5,500 என பதிவாகிறது. இதில் சென்னையில் மட்டும் தினசரி 1,000 பேருக்கு குறையாமல் தொற்று பரவுகிறது. மக்கள் கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும் என பல்வேறு அறிவுரைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதேபோல் தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதம் என வசூலிக்கப்படுகிறது. அதன்படி சென்னையில் மட்டும் ரூ.2 கோடிக்கும் மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. தொற்று பராவமல் இருக்க இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருகிறது.

 

Narendra modi birthday celebration in tamilnadu by L.Murugan

 

இந்நிலையில் இன்று எல்.முருகன், சென்னை பாண்டி பஜாரிலிருந்து சாரட்டு வண்டி மூலமாக யாத்திரை சென்றபோது பெரும்பாலமான பா.ஜ.க தொண்டர்கள் முகக்கவசம் அணியவில்லை. யாருமே தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் இல்லை.

 

Ad

 

மக்களுக்காக சேவை செய்ய வந்திருக்கும் கட்சி மக்களுக்கு முனுதாரணமாக இருக்க வேண்டும் என இந்த யாத்திரை குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இது ஒருபுறமிருக்க மயிலாப்பூர் பல்லக்கு மாநகர்ப் பகுதியில் நடைபெற்ற மோடி பிறந்தநாள் விழாவின்போது, அப்பகுதி மக்களுக்கு இலவச சேலை மற்றும் உணவு வழங்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொள்ள தனிமனித இடைவெளி இல்லாமல் மக்கள் முண்டியடித்து வாங்கிச் சென்றனர். 

 

Narendra modi birthday celebration in tamilnadu by L.Murugan

 

அரசின் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறை, நீதிமன்றத்தின் பேனர் உத்தரவு எல்லாம் காற்றில் பறந்துவிட்டதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.