Skip to main content

இயற்கை வாழ்வியல் அறிஞர் கோ.நம்மாழ்வார் நினைவேந்தல் மற்றும் அறுவடைத் திருவிழா!!

Published on 17/01/2021 | Edited on 18/01/2021

 

nammazhvar Remembrance program in cuddalore

 

தமிழர்களின் திருநாளான  காணும் பொங்கலையொட்டி, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலம் கிராமத்தில் செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் மற்றும் தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் மரபு விதைகளுக்காகவும்,  மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த இயற்கை வாழ்வியல் அறிஞர் கோ.நம்மாழ்வார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் அறுவடைத் திருவிழா இயற்கை விவசாயிகள் முன்னிலையில் நடைபெற்றது.

 

மேலும் அறுவடைக்காலத்தில் மழையின் குறுக்கீடுகளால் உழவர்கள் பல சிரமத்திற்கு ஆளாகி உள்ள சூழலில், விவசாயிகளுக்கு  புத்துணர்வு அளிக்கும் விதமாகவும், சூழ்நிலைகளைச்  செம்மைப்படுத்தவும், சுயச்சார்போடு வாழவைக்கவும்,  ஆர்வமாக உள்ளவர்கள் நெல் அறுவடையில் பங்குபெற்று அறுவடை திருவிழாவைச் சிறப்பிக்கும் நோக்கில் இத்திருவிழா நடைபெற்றது.

 

இவ்விழாவில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை  சம்பா, கருப்பு கவுனி, ஆத்தூர் கிச்சலி சம்பா, இலுப்பைப்பூ சம்பா, காட்டுயானம், தூயமல்லி, சீரகச் சம்பா உள்ளிட்ட நெற்பயிர்கள், முக்கனிகள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தோட்டப்பயிர்கள் உள்ளிட்டவை கண்காட்சிக்காக வைக்கப்பட்டன.

 

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கோட்டேரி சிவக்குமார் வரவேற்புரை வழங்கினார். செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளர் முருகன்குடி கரும்பு கண்ணதாசன் தலைமை தாங்கினார்.

 

மரக்கன்று வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக, தானாக முளைத்த 1000 புங்கன் கன்றுகளைப் பைகளில் வளர்க்கும் நிகழ்வை கவிஞர் அறிவுமதி கன்று நட்டு துவக்கி வைத்தார்.

 

தமிழக உழவர் முன்னணி முருகன்குடி முருகன், இயற்கை வேளாண் ஆர்வலரும் ஏ.கே  அறக்கட்டளை நிறுவனருமான வழக்கறிஞர் அகிலன் ஆகியோர் இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்தும், இயற்கை  உணவுகளின் பயன்கள் குறித்தும் விளக்கிப் பேசினர்.

 

ஏராளமான இயற்கை விவசாயிகள்  கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் மாப்பிள்ளை சம்பா அரிசியில் செய்த மூலிகை கஞ்சியும், அவல் பொங்கலும் பரிமாறப்பட்டது.

 

நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் தமிழ்க்காடு துணிப்பை இயக்கம் சார்பாக துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.