Skip to main content

இரட்டைக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்! 

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

நாமக்கல் அருகே, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவியை சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நிக்கல்சன் கோவை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்துள்ளார். 


நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சாலையில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (27). நாமக்கல் பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி அனிதா (23). இருவரும் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏழு மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்களுடன் ஒரே வீட்டில் அனிதாவின் தந்தை கருப்பசாமியும் (50) வசித்து வருகிறார்.


கடந்த அக்.14ம் தேதி இரவு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், விமல்ராஜின் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு தூங்கிக்கொண்டிருந்த விமல்ராஜையும், அனிதாவையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். வீட்டின் மற்றொரு அறையில் படுத்திருந்த அனிதாவின் தந்தை கருப்பசாமியையும் வெட்டிவிட்டு ஓடினர். கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கருப்பசாமிக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

namakkal young couple incident court surrender police investigation


நாமக்கல் பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டியில் எலக்ட்ரானிக் பொருள்களை வைத்து வியாபாரம் செய்து வரும் நிக்கல்சன் (31) மற்றும் அவருடைய கூட்டாளிகள் சேர்ந்துதான் இந்த இரட்டைக் கொலையைச் செய்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. 


கொல்லப்பட்ட அனிதாவின் அண்ணன் அருண், கோவையில் எலக்ட்ரிகல் வேலைகளை ஒப்பந்தம் எடுத்துச் செய்து வருகிறார். அவரும் நிக்கல்சனும் நெருக்கமான நண்பர்கள். இந்தப்பழக்கத்தில் நிக்கல்சன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததில் அவருடைய மனைவிக்கும் அருணுக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த நிக்கல்சன் அருணுடன் முன்பே தகராறு செய்துள்ளார். இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு, நிக்கல்சனின் மனைவி திடீரென்று மாயமானார். தனது மனைவியை அருண்தான் கடத்தி வைத்திருப்பதாகக் கருதி அவருடன் தகராறில் ஈடுபட்டார்.

namakkal young couple incident court surrender police investigation


இதற்கு பழிதீர்க்காமல் விட மாட்டேன் என்றும் மிரட்டியுள்ளார். இந்த நிலையில்தான் அருணின் மீதுள்ள ஆத்திரத்தில் அவருடைய தங்கை அனிதா, கணவர் விமல்ராஜ் ஆகியோரை கூட்டாளிகளுடன் சென்று வெட்டி கொன்றுள்ளார். நிக்கல்சனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் கோவை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் சரணடைந்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


இதற்கிடையே, கொலை வழக்கில் தொடர்புடைய நிக்கல்சனின் கூட்டாளிகளான நாமக்கல் மேட்டுத்தெருவைச் சேர்ந்த 'பழக்கடை' ரகுவரன் (28), கோபி (23) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். விரைவில் நிக்கல்சனை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அப்போதுதான் கொலைக்கான காரணங்கள் முழுமையாக தெரிய வரும். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.