Skip to main content

"மூட்டை மூட்டையாய்..." கஞ்சா வேட்டையில் நாமக்கல் போலீஸ் சாதனை..! 

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

dddd

 

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தாராளமாக இறக்குமதியாகிறது. இதைக் கண்காணித்து தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளோ உள்ளுர் அரசியல்வாதிகள் நிர்பந்தத்தால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். ஆனால், எல்லோரையும் போல் இல்லாமல் அதிரடியாகக் களமிறங்கி துரித நடவடிக்கை எடுக்கும் போலீஸ் அதிகாரிகளும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த வரிசைக்கு உதாரணமாக சினிமா பாணியில் நாமக்கல் போலீஸ் சேசிங் செய்து சுற்றி வளைத்து ஒரே நாளில் 180 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றியுள்ளார்கள்.

 

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இளம் எஸ்.பி சக்தி கணேசன் பொறுப்பேற்று இரண்டு மாதம்தான் ஆகிறது. இங்கு நடக்கும் குற்றச் செயல்களுக்கு தொடர்ந்து கடிவாளம் போட்டு அடக்கி வருகிறார் சக்தி கணேசன். சென்ற இரண்டு மாதங்களில் 18 கஞ்சா வியாபாரிகள் மாவட்டம் முழுக்க கைது செய்யப்பட்டு, சுமார் 80 இலட்சம் மதிப்புள்ள 800 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

dddd

 

எஸ்.பி.யின் நேரடி கண்காணிப்பில் உள்ள தனிப்படையினர் கடந்த 17.07.2020-ம் தேதி புவனேஸ்வரி என்பவரிடமிருந்து சுமார் 9½ கிலோ கஞ்சாவும், 19.07.2020-ம் தேதி மாயாண்டி (எ) மாதவன், தமிழரசி இருவரிடமும் சுமார் 10 கிலோ கஞ்சாவும், 20.07.2020-ம் தேதி பேபி என்பவரிடமிருந்து சுமார் 10 கிலோ கஞ்சாவும், 21.07.2020-ம் தேதி குமரேசன், இளம்பரிதி மற்றும் மஞ்சுளா ஆகியோரிடமிருந்து சுமார் 44 கிலோ கஞ்சாவும், 25.07.2020-ம் தேதி கமலாதேவி என்பவரிடமிருந்து சுமார் 10 கிலோ கஞ்சாவும், 29.07.2020-ம் தேதி கோகிலா மற்றும் நதியா ஆகியோரிடமிருந்து சுமார் 5 கிலோ கஞ்சாவும், 29.07.2020-ம் தேதி அருள்மணி மற்றும் ரேவதி  ஆகியோரிடமிருந்து சுமார் 20 கிலோ கஞ்சாவும், 25.08.2020-ம் தேதி பழனி மற்றும் ராஜ்குமார் ஆகியோரிடமிருந்து 300 கிலோ கஞ்சாவும், 29.09.2020-ம் தேதி கிருஷ்ணபெருமாள், குமார் மற்றும் பாலையா ஆகியோரிடமிருந்து 210 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட கஞ்சா வியாபாரிகளும் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

 

அதன் தொடர்ச்சியாகவே 29.09.2020-ம் தேதி எஸ்.பி. சக்தி கணேசனுக்கு வந்த தகவலின் அடிப்படையில் நாமக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூபதி மற்றும் காவலர்கள் தினோ மற்றும் ராம்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் ரகசியமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டனர். 

 

ஆரோக்கியதாஸ்

                                                              ஆரோக்கியதாஸ்

 

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிப்காட் அருகே 'TN 39 VR 7430' என்ற FORD காரை தனிப்படை போலீசார் துரத்திச் சென்று சுற்றி வளைத்து மறித்தனர். பிறகு சோதனை செய்ததில் அந்தக் காரில் 180 கிலோ கஞ்சா இருந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 18 லட்சம் இருக்கும். அதைக் கைப்பற்றியும், அந்த காரை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த பத்மநாபன் மகன் ஆரோக்கியதாஸ் என்பவரையும் கைது செய்து கைப்பற்றப்பட்ட அந்த கஞ்சாவுடன் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தொடர் கஞ்சா வேட்டையில் சுமார் ரூபாய் 80 இலட்சம் மதிப்புள்ள சுமார் 800 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

 

Ad

 

இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, அவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்தி கணேசன், IPS நம்மிடம் கூறினார்.

 

இரண்டு மாதத்தில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், 800 கிலோ கஞ்சா சிக்கியிருக்கிறது என்றால் தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் பல ஆயிரம் கிலோ கஞ்சா இல்லாமல் இருக்காது. இந்த ஒரு மாவட்ட போலீஸ் போல் மற்ற மாவட்ட போலீசும் நடவடிக்கை எடுக்கும் என யாரும் நம்புவதற்கு, வாய்ப்பே இல்லை...!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொ.ம.தே.க. வேட்பாளர் அறிவிப்பு! 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
kmdk Party Candidate Announcement

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் கே. சுப்பராயன் மீண்டும் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும் போட்டியிட உள்ளனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார். இவர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.