Skip to main content

காசோலை மோசடி வழக்கில் தறி பட்டறை அதிபருக்கு ஓராண்டு ஜெயில்!

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

NAMAKKAL DISTRICT THIRUCHENGODE COURT JUDGEMENT BANK CHEQUE

 

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தெற்கு ரத வீதியில் தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், சங்ககிரி அருகே உள்ள கோழிக்கால்நத்தம், திருவாண்டிப்பட்டி வடக்கு காடு பகுதியைச் சேர்ந்த தறி பட்டறை அதிபர் பாலகிருஷ்ணன் மாத சீட்டு திட்டத்தில் சேர்ந்தார். 

 

கடந்த 23.03.2016 முதல் மாதம் 1.25 லட்சம் ரூபாய் வீதம் தொடர்ந்து 6 மாதம் செலுத்தி வந்துள்ளார். பின்னர் 25 லட்சம் ரூபாய் சீட்டுப் பணத்தை எடுத்துள்ளார். ஆனால், சீட்டுத்திட்டம் முடிந்த நிலையில் அவர் 17.45 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. நிதி நிறுவனம் தரப்பில் பலமுறை கேட்டும் அவர் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில் நெருக்கடி அதிகரிக்கவே, பாலகிருஷ்ணன் கடந்த 25.06.2018ல் தான் கொடுக்க வேண்டிய தொகைக்காக காசோலை எழுதிக் கொடுத்தார். ஆனால், காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. 

 

இதுகுறித்து நிதிநிறுவன கிளை மேலாளர் சசிகுமார், திருச்செங்கோடு விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி முருகவேல், பாலகிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்ததோடு, பாக்கித்தொகை 17.45 லட்சம் ரூபாயை செலுத்துமாறும் தீர்ப்பு அளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
People should not ignore Transgender says Chief Minister MK Stalin

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 தேசிய திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம், அடையாள அட்டைகள், பேருந்துகளில் இலவசப் பயணம், மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம், உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது திமுக. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.