Skip to main content

ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிய நல்லமநாயுடு!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

 Nallamanaidu removes Jayalalithaa from the post of Chief Minister!

 

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி. நல்லமநாயுடு. இவருக்கு வயது 83. உடல்நலக்குறைவு காரணமாக இன்று (16.11.2021) அதிகாலை சென்னை பெரவள்ளூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர். ஜெயலலிதாவிற்கு எதிரான ஊழல் மற்றும் லஞ்ச புகார்களை விசாரித்து, அவரை கைது செய்து, ஆறே மாதத்திற்குள் அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையையும் இவர் தாக்கல் செய்தார். இதுதான் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதலமைச்சர் பதவியை ஜெயலலிதா இழக்கக் காரணமாக இருந்தது. ஜெயலலிதாவுக்கு எதிரான இன்னொரு வழக்கு, பிளெசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு. இந்த வழக்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த வழக்கிற்காக இவர் அங்கு சென்றபோது நடராஜனும் சென்றுள்ளார். இருப்பினும் அதனை தைரியமாக எதிர்கொண்டுள்ளார்.

 

 Nallamanaidu removes Jayalalithaa from the post of Chief Minister!

 

தமிழ்நாடு முதல்வராக கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு காவல்துறையின் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு 1996 ஜூன் மாதம் வழக்கு தொடர்ந்தது.

 

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்க பல அதிகாரிகள் தயக்கம் காட்டிவந்தனர். அப்படிப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புப் பிரிவில் அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய நல்லமநாயுடு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

 

இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு நல்லமநாயுடுவின் விசாரணையும், அவர் சேகரித்த தடயங்களும் ஆவணங்களும் மிக முக்கிய காரணம். அத்துடன் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையே குற்றவாளிகளுக்குத் தண்டனையைத் தேடி தந்தது என போலீசார் தெரிவிக்கின்றனர்.

 

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் ஆதாரங்களைத் திரட்டி சமர்ப்பிக்க பெரும் துயரங்களைச் சந்தித்தார். பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஓய்வுபெறும்போது உள்ள பலன்களை நிறுத்தியது. அரசு இல்லத்திலிருந்து காலி செய்யச் சொல்லி தொந்தரவு செய்ததால், வீட்டையும் காலி செய்துள்ளார். வழக்குக்காக லண்டனுக்குச் சென்ற கணக்கு வழக்குகளை சரியாக சமர்ப்பிக்கவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும், அவரது மகன் பணியாற்றும் இடத்திலும் தொந்தரவு செய்துள்ளனர். இவ்வளவு தொந்தரவுகளையும், துயரங்களையும் இவர் தனியாகவே நின்று சந்தித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடகா மாநிலத்தில் நடந்தது. அந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யாவுக்கு வழக்கு தொடர்பாக பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

 

 Nallamanaidu removes Jayalalithaa from the post of Chief Minister!

 

1961ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராகச் சேர்ந்த இவர், பின்னாளில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இந்த வாரம் அவர் பணியில் சேர்ந்து 60 ஆண்டுகாலம் முடிவடைகிறது. இதனை தன்னுடன் பணியாற்றியவர்களுடன் கொண்டாட இருந்தநிலையில் காலமானார்.

 

 Nallamanaidu removes Jayalalithaa from the post of Chief Minister!

 

1997ஆம் ஆண்டே நல்லமநாயுடு ஓய்வுபெற்றுவிட்டார். நக்கீரன் பலமுறை வலியுறுத்திய பின்னர், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு குறித்த தன் அனுபவங்களை ‘என் கடமை. ஊழல் ஒழிக!’ என்ற புத்தகம் வாயிலாக சுயசரிதையாக பதிவுசெய்துள்ளார். அப்புத்தகத்தை நக்கீரன் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.