Skip to main content

நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல்; பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

Nakkheeran  on journalists; Condemned by journalists' associations

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான செய்திகளை நமது நக்கீரனில் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் நேற்று நமது முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

 

அதேபோல் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். அதன்படி, திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம், நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் கடந்த (19-09-2022) கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தலைவாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் சென்ற காரை பின்தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல் கார் மீதும் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் தமிழக அரசை  திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்துகிறது.

 

புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம்: நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் கடந்த 19-09-2022 அன்று கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு காரில் திரும்பி வரும்போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த சிலர், இருவர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தை புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பின்னணியில் உள்ளோரையும் கைது செய்ய வேண்டும்.

 


திண்டுக்கல் பிரஸ்கிளப்: கடந்த 19ம்தேதி நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்துவிட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தலை வாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் சென்ற காரை பின்தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல் கார் மீதும் நிருபர் பிரகாஷ் மற்றும் போட்டோகிராபர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை திண்டுக்கல் பிரஸ்கிளப் வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ், போட்டோகிராபர் அஜித் குமார் ஆகிய இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்கள் இருவரும் கூடிய விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறோம். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதோடு இந்த கொலை வெறி தாக்குதலை தூண்டிவிட்டவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை திண்டுக்கல் பிரஸ்கிளப் வலியுறுத்துகிறது.

 

மதுரை பிரஸ் கிளப்: நக்கீரன் இதழின் முதன்மை செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனடியாக கைது செய்யுமாறு தமிழக அரசை பிரஸ் கிளப் ஆப் மதுரை அமைப்பு வலியுறுத்துகிறது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி இறந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள், செய்தி நிறுவனங்கள் பரபரப்பான செய்திகள், புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளன. இந்த வழக்கில் உள்ள மர்மம் நீங்க வேண்டும் என நக்கீரன் இதழ் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளிக்கு நேற்று செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் முதன்மை செய்தியாளரை தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோரின் காரை தலைவாசல் அருகே தடுத்து நிறுத்திய குண்டர்கள் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவர்கள் இருவரும் படுகாயடைந்துள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை பிரஸ் கிளப் ஆப் மதுரை அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. குண்டர்களில் தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு தமிழக அரசைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக காவல் துறைக்கு உரிய வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வழங்க வேண்டும் என வேண்டுகிறோம்.

 

விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம்: நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ், 19-09-2022.அன்று கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தலைவாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ்  சென்ற காரை பின்தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல் கார்மீதும் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பின்னணியில் உள்ள சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் தமிழக அரசை விருதுநகர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.