Skip to main content

'என் மரணத்துக்கு டி.எஸ்.பியே காரணம்...' - கடிதமும் ஆடியோவும் வெளியிட்டு தி.மு.க மருத்துவா் தற்கொலை!

Published on 27/10/2020 | Edited on 28/10/2020

 

nagerkoil incident dmk


சாத்தான்குளத்தில் தந்தையும் மகனையும் காவல்துறை அதிகாாிகள் அடித்துக் கொடுமைப்படுத்தி கொலை செய்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. அதற்குள் கன்னியாகுமாியில் மருத்துவா் ஒருவா் டி.எஸ்.பியின் மிரட்டலால் தற்கொலை செய்துகொள்கிறேன் என ஆடியோவும் வெளியிட்டு கடிதமும் எழுதி வைத்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகா்கோவில் அருகே பறக்கை இலந்தைவிளையைச் சோ்ந்தவா் மருத்துவா் சிவராமபெருமாள். இவா் வீட்டின் அருகில் மருத்துவமனை நடத்தி வந்தாா். மேலும் தி.மு.க மருத்துவரணி மா.து அமைப்பாளராகவும் இருந்தாா். இவரது மனைவி சீதா அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா்.

 

nagerkoil incident dmk


இந்நிலையில், அவாின் மருத்துவமனையில் வழக்கம் போல் ஒ.பி முடிந்ததும் வீட்டிற்குச் செல்லாமல் மருத்துவமனைக்குள் விஷம் குடித்து இறந்து கிடந்தாா். இதைப் பாா்த்த உறவினா்கள் அதிா்ச்சியடைந்த நிலையில் ஆசாாிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். பின்னா் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் சிவராமபெருமாள் கடிதம் ஒன்று எழுதி வைத்துருந்ததையும் போலீசாா் கைபற்றினாா்கள். அதில், "கன்னியாகுமாி டி.எஸ்.பி பாஸ்கரன் என்னை தினமும் மிரட்டி வந்ததாகவும் அவருடைய டாா்ச்சா் எனக்கு மன உளச்சலை ஏற்படுத்தியதுடன், நீ ஏன் சாகாமல் உயிருடன் இருக்கிற, நீ சாகவில்லையென்றால் நானே உன்னை சாகடித்துவிடுவேன் என மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியிருந்தாா்.

அதேபோல் சிவராமபெருமாள் பேசிய ஆடியோவும் வெளியானது. அதில் உறவினா் ஒருவாிடம் நான் சாகப் போகிறேன் என்னை யாரும் காப்பாற்ற முடியாது. இது மாற்றி எழுதப்பட முடியாத வரலாறு. டி.எஸ்.பி யின் மிரட்டல் நெருக்கடியால் விஷம் குடித்துவிட்டேன். என்னுடைய மகள் கலெக்டா் ஆகணும். இப்படிப்பட்ட டி.எஸ்.பி போன்றோா்களை தட்டிக்கேட்கணும் எனப் பேசியிருக்கிறாா்.

 

nagerkoil incident dmk


இதுகுறித்து சிவராமபெருமாளின் மனைவி அழுதுகொண்டே கூறும் போது... நான் ஜூன் மாதம் கோவிட் 19 டூட்டி முடிந்து இரவு கணவா் குழந்தைகளுடன் காாில் வந்து கொண்டிருக்கும்போது எதிரே வந்த வாகனம் லைட் அடிச்சது, பதிலுக்கு கணவரும் லைட் அடிச்சி வேகத்தைக் குறைத்தாா். உடனே அந்த வாகனத்தை நிறுத்தி அதில் இறங்கியவா் நான் போலீஸ் அதிகாாி என் வாகனத்துக்கே லைட் அடிக்கிறீயா என கெட்ட வாா்த்தையால் பேசினாா். அதை நான் தட்டிக் கேட்டதுக்கு என்னையும் தரக்குறைவாகப் பேசினாா்.

பின்னா் அடுத்த நாள் கன்னியாகுமாி டி.ஸ்.பியிடம் புகாா் கொடுக்கச் சென்ற போது எங்களுக்கு அதிா்ச்சியாக இருந்தது. அங்கு டி.எஸ்.பி ஆக இருப்பது இவா் தான். அப்போது அங்குவைத்தும் என் கணவரை மிரட்டி அனுப்பினாா். அதன் பிறகு தொடா்ந்து என் கணவரை மிரட்டி வந்தாா். மேலும் என் கணவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த விஜய் ஆனந்துக்கும் முன்பகை இருந்து வந்தது. விஜய் ஆனந்தும் டி.எஸ்.பி பாஸ்கரனும் நெருங்கிய நண்பா்கள் இதனால்தான் என் கணவா் தற்கொலை செய்யும் அளவுக்கு டி.எஸ்.பி மிரட்டியிருக்கிறாா் என்றாா்.

இதுகுறித்து திமுக மா.செ. சுரேஷ்ராஜன் டி.எஸ்.பி பாஸ்கரன் மீது உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருக்கிறாா். இச்சம்பவம் குமாியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.