Skip to main content

பாஜகவில் இருந்து திமுகவில் மீண்டும் ஐக்கியமான வேதாரண்யம் வேதரத்தினம்; நாகை அரசியல் பரபரப்பு

Published on 22/07/2020 | Edited on 22/07/2020
nagai vedharathinam joint in dmk

 

பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அசைக்கமுடியாத சக்தியாக விளங்கியவர் திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், பிறகு பாஜகவிற்கு சென்று மீண்டும் அவரது தாய் கழகமான திமுகவிற்கே திரும்பியிருக்கிறார்.

 

நாகை மாவட்டத்தின் கடலோர பகுதியான வேதாரண்யத்தை அடுத்துள்ள தேத்தாக்குடியை சேர்ந்தவர் வேதரத்தினம். எஸ்.கே.வி என அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் வேதரத்தினம். திமுகவில்12 ஆண்டுகள் ஒன்றிய செயலாளராகவும், 1996, 2001, 2006 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.

 

அடுத்து 2011ல் நடந்த தேர்தலில் அவருக்கு சீட் வழங்காமல், அப்போது கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்டது வேதாரண்யம் தொகுதியை தாரைவார்த்தது திமுக. அதனால் திமுக மீது கோபமான வேதரத்தினம் சுயேச்சையாக போட்டியிட்டு பாமக வேட்பாளராக போட்டியிட்ட சின்னத்துரையை விட அதிக வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்து, திமுக கூட்டணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

 

nagai vedharathinam joint in dmk


அதன்பிறகு தனிமரமாக இருந்தவரை தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகும் வாய்ப்பை பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்படுத்திக்கொடுத்தார். அதன் பிறகு 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்காக பிரதமர் மோடியே ஆகாய மார்க்கமாக தேத்தாக்குடிக்கு வந்து பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டார். ஆனாலும் அந்த தேர்தலில் வேதரத்தினத்தால் அதிமுக சார்பில் போட்டியிட்ட சிட்டிங் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் ஈடுகொடுக்க முடியாமல் தோல்வியை தழுவினார்.

 

ஆனாலும் பெயர் சொல்லும் அளவிற்கு வாக்குகளைப் பெற்று தனது செல்வாக்கு குறையவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் மார்தட்டிக்கொண்டார். அதன் பிறகு மாநில பொறுப்பில் இருந்தவருக்கு, மாநில பொது செயலாளர் பதவி கிடைக்கும் என்று நம்பி இருந்தநிலையில், சமீபத்தில் நடந்த கட்சி அறிவிப்பில் மாநில பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தேசிய பொதுக்குழு உறுப்பினராக்கி டம்மியாக்கினர். பொறுப்பை வழங்கி அவரை ஓரம்கட்டும் நிலை உருவானது. மீண்டும் விரக்தியான வேதரத்தினம் அதிமுகவா, திமுகவா என்கிற நிலைப்பாட்டிற்கு சென்றிருக்கிறர். அந்த சமயத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் மூலம் திமுகவில் ஐக்கியமாகும் முடிவை எடுத்து, திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒப்புதல் வாங்கி இன்று மாலை வேதாரண்யம் நகர அலுவலகத்தில், வீடியோ கால் மூலம் மீண்டும் திமுகவில் சேர்ந்திருக்கிறார்.

 

nagai vedharathinam joint in dmk


அதன்பின் திமுக நகர கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று வேதாரண்யம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.