Skip to main content

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி கருவை கலைத்து ஏமாற்றிய சப்- இன்ஸ்பெக்டர்!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தைச்சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி, கருவை கலைக்க வைத்ததோடு, இதை வெளியில் சொன்னால் குடும்பத்தோடு வெட்டி சாய்த்து விடுவேன். உனது குடும்பத்தையே சீரழித்துவிடுவேன் என அந்த பெண்ணை மிரட்டும் காவல்துறை உதவி ஆய்வாளரின் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

nagai police sub inspector women connection issue complaint not accept in police

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் சுபஸ்ரீ. தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தற்போது திட்டச்சேரியில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் தலைஞாயிறு ஓரடியம்புலத்தை சேர்ந்த விவேக் ரவிராஜ் என்பவருக்கும் மணல்மேடு காவல்நிலையத்தில் பணியில் இருக்கும் போது முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு, பிறகு காதலாக மாறி கல்யாணமாகமலேயே குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். 

nagai police sub inspector women connection issue complaint not accept in police

அதோடு இருவரும் தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். அதன் விளைவாக சுபஸ்ரீ கர்ப்பமானார். இதனை சுபஸ்ரீ சப் இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ்யிடம் கூறவே, அதிர்ச்சியடைந்த விவேக் ரவிராஜ், அந்த கர்ப்ப விவகாரத்திலிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணி பல வழிகளில் முடிவு செய்தார். சுபஸ்ரீயிடம் "ஒரு வருடம் கழித்து திருமணம் செய்துகொள்வோம், கல்யாணம் செய்து கொள்ளாமல் கர்ப்பமாகி குழந்தை பிறந்தால் உனக்கும் அவப்பெயர், எனக்கும் பிரச்சனை, இருவரும் ஈருடல் ஓருயிறாக கலந்துவிட்டோம், இனி உன்னை ஏமாற்ற மாட்டேன், என்னை நம்பு என்று கூறி கருவை கலைத்து விடுமாறு வற்புறுத்தியுள்ளார். அதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று  மருத்துவர் மூலம் கருக்கலைப்பும் செய்துள்ளார். 
 

nagai police sub inspector women connection issue complaint not accept in police


 

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல சுகத்தை அனுபவித்து கைகழுவிய சப் இன்ஸ்பெக்டர், நாளடைவில் சுபஸ்ரீயிடம் பேசுவதை தவிர்த்துள்ளார், இதில் சந்தேகம் அடைந்த சுபஸ்ரீ "என்னை உடனடியாக திருமணம் செய்து கொள் இல்லை என்றால் செத்து விடுவேன்" என கெஞ்சியுள்ளார். இதற்கு கொஞ்சமும் இரக்கம் காட்டாத, அந்த காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ் தான் மக்களை பாதுகாக்கும் காவல்துறையில் இருப்பதையும், அதன் கவுரவத்தையும் குப்பையில் போட்டுவிட்டு, இனிமேல் என்னிடம் பேசினாலோ, இச்சம்பவத்தை வெளியில் கூறினாளோ, உன்னையும் உன் குடும்பத்தாரையும் கொன்று புதைத்து விடுவேன், இதனால் பத்து தலை விழுந்தாலும், நான் ஜெயிலுக்கு போனாலும் தயங்க மாட்டேன். உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது, நீ என்ன வேனும்னாலும் பன்னிக்கோ" என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

nagai police sub inspector women connection issue complaint not accept in police

மேலும் அந்த ஆடியோவில், திருமணம் செய்து கொள்ளும்படி கதறி அழும் அந்த இளம்பெண் சுபஶ்ரீயையும் அவரது குடும்பத்தையும் கொச்சையான, அறுவறுக்கத்தக்க வார்த்தைகளாலும், ஆபாச வார்த்தைகளால் ஒருமையில் பேசி மிரட்டல் விடுக்கிறார். அந்த ஆடியோக்களில் அடுத்ததுடுத்து சப்- இன்ஸ்பெக்டர் பேசிய வார்த்தைகள் காவல்துறையை தாண்டி பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 
 

உதவி ஆய்வாளரின் பேச்சைக்கேட்டு பயந்துபோன அந்த இளம்பெண் சுபஸ்ரீ, நாகை, மயிலாடுதுறை, சென்னை என ஏறாத காவல்துறை அலுவலகங்களே இல்லை. தன்னை கர்ப்பமாக்கி, கொலை மிரட்டல் விடுத்த திட்டச்சேரி சப்- இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கெஞ்சி மண்டியிடாத காவல்துறை அதிகாரிகளே இல்லை. ஒவ்வொரு இடத்திலும் நான் யாரு தெரியுமா, அமைச்சர் ஓ,எஸ்,மணியனின் உறவுக்காரன், என தனது செல்வாக்கை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்காமல் தடுத்து வருகிறார்.அதோடு மயிலாடுதுறை அதிமுக முக்கிய புள்ளிகளின் உதவியோடு ரவுடிகள் சிலரை சுபஸ்ரீ வீட்டிற்கு அனுப்பி வைத்து, கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டவும் செய்துள்ளார்.
 

nagai police sub inspector women connection issue complaint not accept in police


 

இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்தோம், மேலே உள்ள அத்துனைக்கும் ஆடியோ, போட்டோ ஆதாங்களை நம்மிடம் கொடுத்தவர். தன்னை காதலித்து ஏமாற்றியதோடு, சட்டத்திற்கு விரோதமாக கருவை கலைத்தும்,கொலை மிரட்டல் விடுத்துள்ளதற்கும் பத்துக்கும் அதிகமான ஆடியோ ஆதாரங்ளை கொடுத்தப்பிறகும் உதவி ஆய்வாளர் விவேக் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கவில்லை," என கலங்குகிறார். இது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் விவேக்கை விளக்கம் கேட்க தொடர்பு கொண்டோம். ஆனால் அவரது செல்போன் 'ஸ்விட்ச் ஆப்பில்' இருந்ததாக கூறுகிறது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.