Skip to main content

நாகை பெண் பாலியல் வன்கொடுமை... அதிரவைக்கும் சி.சி.டி.வி. காட்சி..!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

Nagai female .. shocking cctv footage

 

கட்டடட சித்தாள் வேலை பார்த்துவந்த பெண் ஒருவரை வாயைப் பொத்தி கோவிலுக்குள் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம், நாகையை கலங்கடிக்கச் செய்துள்ளது. அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து துரத்திச் செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

 

நாகப்பட்டினம், வெளிப்பாளையம் நாகதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (பெயர்மாற்றப்பட்டுள்ளது). 40 வயதான கவிதாவின் கணவர் வேதையன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்தச் சூழலில் குடும்ப வறுமையைப் போக்க கட்டட பணியில் சித்தாள் வேலை செய்துவருகிறார் கவிதா.

 

இந்நிலையில் நேற்று (08/01/2021) இரவு 9 மணிக்கு, நாகை வெளிப்பாளையம் அருகே, காமராஜர் காலனியில் குடியிருக்கும் அவரது சகோதரி வீட்டில் தங்குவதற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அவ்வழியே பைக்கில் பின்தொடர்ந்து வந்த  இரண்டு இளைஞர்கள் கவிதாவின் வாயைப் பொத்தி அருகே இருந்த விநாயகர் கோவிலுக்குத் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இரவு 9 மணியில் இருந்து இரவு 2 மணி வரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவது தெரிந்து, அந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

 

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கவிதா நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவருகிறார். அதனைத் தொடர்ந்து, நாகை வண்டிபேட்டை பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ், அக்கரைகுளம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் ஆகிய இருவரையும் வெளிப்பாளையம் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

 

மக்கள் புழக்கம் அதிகமுள்ள அந்தப் பகுதியில் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது. 

 

இதற்கிடையில், கூலி வேலை செய்துவிட்டு வீட்டுக்குச் சென்ற பெண்ணை இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று, பின்னர் இருட்டில் அவரை மடக்கி கோவிலுக்குள் இழுத்துச் செல்லும் சி.சி.டி.வி. காட்சியும் தற்போது வெளியாகியிருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த சமூக நலத்துறை அதிகாரிகள் தாமாகவே முன்வந்து பாதிக்கப்பட்ட பெண்ணிடமும், அவரது உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.