Skip to main content

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட 'பெட்ரோல் பங்க்' ஊழியர்கள்!

Published on 07/06/2020 | Edited on 07/06/2020




 

nagai district petrol punk labours incident police investigation


நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஊழியர்கள் இருவர் கத்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.


இது குறித்து விசாரித்தோம், "புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா நம்பிவயல் காட்டாத்தியை சேர்ந்தவர் ஆனந்தன். அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தனின் நண்பர் முருகேசன் ஆகிய இரண்டு பேரும் நாகை அருகே உள்ள திருமருகல் ஜெயசந்திரா ஏஜென்சிஸ் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தனர். அந்த பங்க் கச்சனம் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவருக்கு சொந்தமானது. 

அந்த பங்கில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த முருகேசன் தற்கொலை செய்துகொள்ளும் வரை விசுவாசமான வேலைக்காரராகவே இருந்து வந்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகேசனின் நண்பன் ஆனந்தனை அழைத்துவந்து வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். இவர் பங்கின் மொத்த வரவு செலவு கணக்குகளையும் பார்த்து வந்துள்ளார்.

 

nagai district petrol punk labours incident police investigation

இந்நிலையில் வரவு செலவு கணக்கு பார்த்ததில் சுமார் 8 லட்சம் ரூபாய் கணக்கு வராததால் திருமருகல் பகுதியை சேர்ந்த சில கந்துவட்டி கும்பலிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருவரும் சமாளித்து வந்திருக்கின்றனர். தொடர்ந்து அந்த பணம் கணக்கிற்கு வராததால் தொகையை இருவருமே ஒப்புகொள்வதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உரிமையாளர் கலியபெருமாளிடம் எழுதி கொடுத்துவிட்டு அங்கேயே வேலைப் பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்ற ஆனந்தன் கடந்த 2 ம் தேதி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனந்தனின் இறப்புக் குறித்தான தகவல் அறிந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர் கலியபெருமாள் திட்டச்சேரி காவல்நிலையத்திற்கு நேற்று (06/06/2020) இரவு முருகேசனை அழைத்து சென்று முருகேசன் மீதே புகார் அளித்திருக்கிறார், அங்கு முழு தொகையையும் முருகேசனை ஒப்புகொள்ளும்படி போலீசாரை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகேசன் மொத்த தொகையும் தன்னால் இனி கொடுக்க முடியுமா? என்கிற அச்சத்திலும், தனது நண்பன் ஆனந்தன் உயிரிழந்த சோகத்திலும் பெட்ரோல் பங்கில் உள்ள அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

nagai district petrol punk labours incident police investigation

இது குறித்து தகவலறிந்த திட்டச்சேரி காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இரண்டு பேரின் உறவினர்களும் நாகைக்கு வந்து உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கந்துவட்டி கும்பலால் தொடர்ந்து மிரட்டப்பட்டு உயிரிழப்பு நடந்துள்ளதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர் திட்டச்சேரி போலீசார்.

ஆனந்தன், முருகேசன் ஆகிய இரண்டு பேரின் உயிரிழப்பு உரிமையாளரால் நடந்ததா? அல்லது கந்துவட்டி கும்பலிடம் கடன் வாங்கியதால் அவர்கள் மிரட்டி உயிரிழந்து உள்ளார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் நாகை டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.