Skip to main content

"எனக்கே ஆச்சரியமாக உள்ளது" - முதல்வர் பழனிசாமியை புகழ்ந்த நட்டா...

Published on 14/01/2021 | Edited on 14/01/2021

 

nadda speech on pongal festival

 

ஒரு ஆளுமைமிக்கத் தலைவர் மறைந்த பிறகும் முதல்வர் பழனிசாமி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது என நட்டா தெரிவித்துள்ளார். 

 

பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக இன்று மாலை தமிழகம் வந்தடைந்தார் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா. தமிழகம் வந்தடைந்த நட்டாவை பாஜக தொண்டர்கள் சென்னை விமான நிலையத்திற்குத் திரண்டு சென்று வரவேற்றனர். அதன்பின்னர் சென்னை மதுரவாயலில் நடைபெற்ற பாஜகவின் பொங்கல் விழாவில் கலந்துகொண்டார் நட்டா. அப்போது தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த நட்டா, தமிழகத்தின் கலாச்சாரம் குறித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு வளமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது, அது 'பக்தி' பிரதேசமாகும். மதத் தலைவர்கள் மற்றும் புனிதர்களால் மத உணர்வுகள் பாதுகாக்கப்பட்ட ஒரு இடம் இது. உலகிலேயே மிகப் பழமையான மொழி தமிழ். தமிழ்நாட்டில் வரும் காலத்தில் பாஜகதான்; அதனால்தான் பல்வேறு துறையினர் பாஜகவில் இணைகிறார்கள். நாடு முழுவதும் முன்னோக்கிச் செல்வதை பிரதமர் மோடி பார்க்க விரும்பினார். அதே சமயம், வளர்ச்சியைப் பொருத்தவரை தமிழகம் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலை மேற்கொள்வதை அவர் உறுதி செய்துள்ளார். இரண்டு திராவிட கட்சிகளின் போட்டியால் தமிழகத்தில் பாஜக வளர முடியவில்லை. ஒரு ஆளுமைமிக்கத் தலைவர் மறைந்த பிறகும் முதல்வர் பழனிசாமி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது, அவரது திறமையை வெளிக்காட்டுகிறது, அது எனக்கே ஆச்சரியமாக உள்ளது" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

கைவிரித்த பா.ஜ.க.! எதிர்த்து களம் இறங்கும் வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
BJP leader is contesting against Radhika in Virudhunagar

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக, தன்னுடைய தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தமாக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி,  புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது.

BJP leader is contesting against Radhika in Virudhunagar

காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக கூறிய சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா என்பவர் விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், பாஜக தலைமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த டாக்டர் வேதா  சுயேட்சையாக தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.