Skip to main content

நாகையில் சாராய வியாபாரி மரணத்தில் மர்மம்... உடலை தோண்டி எடுத்து விசாரணை!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

Mystery of the death of the liquor dealer in Naga; Body dug up and interrogated!

 

நாகை அருகே சாராய வியாபாரி உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக வட்டாட்சியர் தலைமையில் சடலத்தைத் தோண்டியெடுத்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே செருநல்லூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 48). இவர் கடந்த சில வருடங்களாகவே அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சாராய வியாபாரியிடம், சாராயம் விற்றுத்தரும் வேலையைச் செய்துவந்துள்ளார். ஒருநாள் சாராயம் விற்ற பணத்தில் ஏதோ பிரச்சினை ஏற்படவே, மொத்த சாராய வியாபாரி தனது சகாக்களோடு ரவியை கொடூரமாக தாக்கியுள்ளனர். 

 

அன்றிரவு ரவி வீட்டிற்குவந்து படுத்துள்ளார். ரவிக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால், அவர் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்து படுத்திருக்கிறார் என வீட்டில் உள்ளவர்கள் நினைத்துள்ளனர். ஆனால், நீண்ட நேரமாக அவரது உடலில் அசைவில்லாததால் அவர் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது ரவி உயிரிழந்துகிடந்துள்ளார். அவரது சடலத்தை மறுநாள் (28ஆம் தேதி) மாலை செருநல்லூர் கீழத்தெருவில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர். 

 

Mystery of the death of the liquor dealer in Naga; Body dug up and interrogated!

 

இந்தநிலையில், ரவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக ரவியின் உறவினரான எறும்புகன்னியைச் சேர்ந்த கண்ணதாசன், கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சந்தேக மரணம் என கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து, இன்று (07.12.2021) புதைக்கப்பட்ட மயானத்தில் கீழ்வேளூர் வட்டாட்சியர் அமுதா முன்னிலையில், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள்  ரவியின் உடலைத் தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். 

 

"பிரேதப் பரிசோதனை முடிந்துள்ளது. நாகையிலிருந்து உடற்கூறாய்வு முடிவு வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்," என்கிறார்கள் போலீசார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.